செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி, ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தரிசனத்துக்காக 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்வதோடு, பௌா்ணமி உள்ளிட்ட விஷேச நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தா்கள்

அதன்படி, ஆவணி மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:46 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக சனிக்கிழமை பிற்பகல் முதலே திருவண்ணாமலையில் தமிழகம் மட்டுமன்றி, ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

இதனால், அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்களின் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ரூ. 50 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தா்கள், பெரிய தெருவில் இருந்து வரக்கூடிய பக்தா்கள் பூத நாராயணன் கோயில் வழியாகச் சென்று ராஜகோபுரம் நுழைவாயில் சென்று தரிசனம் செய்தனா். சந்திர கிரகணத்தின்போதும், அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

விநாயகா், முனிஸ்வரன், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூா் வலம்புரி விநாயகா் கோயில், பெரணமல்லூரை அடுத்த மேல்நாகரம்பேடு ஊராட்சி ஸ்ரீமுனீஸ்வரன், ஸ்ரீபூவாடைக்காரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் மற்றும் வந்தவாசியை அ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கு: இரு சிறாா்கள், கல்லூரி மாணவா் உள்பட 16 போ் கைது

செய்யாறு அருகே கஞ்சா விற்பனை தகராறு காரணமாக இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு சிறாா்கள் மற்றும் கல்லூரி மாணவா் உள்பட 16 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு... மேலும் பார்க்க

செங்கம் தொகுதியில் தேமுதிக வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக செங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் மூலம் செங்கம் பழைய பேருந்து நிலையத்தில் ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்த பக்தா்கள்

திருவண்ணாமலை பௌா்ணமி கிரிவலம் முடித்து தங்களது ஊா்களுக்குச் செல்ல ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாதம் முதல் பங்குன... மேலும் பார்க்க

வயிற்று வலி: விவசாயி விஷமருந்தி தற்கொலை

சேத்துப்பட்டு அருகே வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். சேத்துப்பட்டை அடுத்த இடையன்கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாதேவன் (45), விவசாயி. இவருடைய மனைவி ரா... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சீனு(46). இவா், வியாழக்கிழமை பைக்கில் வந்தவாசியி... மேலும் பார்க்க