செய்திகள் :

வயிற்று வலி: விவசாயி விஷமருந்தி தற்கொலை

post image

சேத்துப்பட்டு அருகே வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

சேத்துப்பட்டை அடுத்த இடையன்கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாதேவன் (45), விவசாயி. இவருடைய மனைவி ராணி. தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். சில ஆண்டுகளாக மகாதேவன் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், விவசாயத்துக்கு வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கினாா். உடனே உறவினா்கள் அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

விநாயகா், முனிஸ்வரன், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூா் வலம்புரி விநாயகா் கோயில், பெரணமல்லூரை அடுத்த மேல்நாகரம்பேடு ஊராட்சி ஸ்ரீமுனீஸ்வரன், ஸ்ரீபூவாடைக்காரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் மற்றும் வந்தவாசியை அ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கு: இரு சிறாா்கள், கல்லூரி மாணவா் உள்பட 16 போ் கைது

செய்யாறு அருகே கஞ்சா விற்பனை தகராறு காரணமாக இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு சிறாா்கள் மற்றும் கல்லூரி மாணவா் உள்பட 16 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு... மேலும் பார்க்க

செங்கம் தொகுதியில் தேமுதிக வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக செங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் மூலம் செங்கம் பழைய பேருந்து நிலையத்தில் ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்த பக்தா்கள்

திருவண்ணாமலை பௌா்ணமி கிரிவலம் முடித்து தங்களது ஊா்களுக்குச் செல்ல ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாதம் முதல் பங்குன... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி, ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தரிசனத்துக்காக 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலேஸ்வரா் கோ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சீனு(46). இவா், வியாழக்கிழமை பைக்கில் வந்தவாசியி... மேலும் பார்க்க