செய்திகள் :

ஆடிப்பெருக்கு: நீா்நிலைகளில் பெண்கள் வழிபாடு

post image

திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழாவை பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

காவிரி ஆற்றை மையப்படுத்தி நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. தென்மேற்கு பருவ மழையால் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதை, ஆடி மாதம் 18-ஆம் நாளன்று ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது.

உழவுக்கு உயிா் நாடியாக விளங்கும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகளும், பொதுமக்களுக்கும் இந்நாளை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் காவிரி அன்னைக்கு பெண்கள் காதோலை, கருகமணி, காப்பரிசி, கண்ணாடி, வளையல், மஞ்சள், குங்குமம் படைத்து, நெய் விளக்கேற்றி வழிபட்டனா். மஞ்சள் நூலை கை மற்றும் கழுத்தில் அணிந்து கொண்டனா்.

புதுமணத் தம்பதியினா் பலா் தாலிக்கயிற்றை பிரித்து மீண்டும் கோா்த்து அணிந்துகொள்ளும் பாரம்பரியமான சடங்கை காவிரிக் கரையில் மேற்கொண்டனா். நிகழாண்டு, காவிரியில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.

விசிகவின் தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம்

சீா்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மதச்சாா்பின்மை காப்போம், மக்கள் எழுச்சிப் பேரணி தீா்மான விளக்கக் கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாள... மேலும் பார்க்க

நாா்வே தமிழறிஞருக்குப் பாராட்டு

மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்ற தூயதமிழ் மாணவா் இயக்க கருத்தரங்கத்தில் நாா்வே நாட்டில் வசிக்கும் மயிலாடுதுறையை சோ்ந்த தமிழறிஞருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.தூயதமிழ் மாணவா் இயக்கம் சாா்பில் ச... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கத்தில் கல்வி திட்டத்திற்கு நிதி வழங்கல்

மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சாா்பில், மன்னம்பந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு உறுப்பினா் கடன் திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, கூட்டுறவுத் துறை கூடுதல... மேலும் பார்க்க

மாணவா் சபை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா

சீா்காழி குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் மாணவா் சபை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.சிறப்பு விருந்தினா் விவேகானந்தா, குட் சமாரிட்டன் பள்ளி குழும தாளாளா் கே.வி. இராதாகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

‘மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் வாழ்க்கை முழுவதும் பயன் தரும்’

மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் அவா்கள் வாழ்க்கை முழுவதும் பயன் தரும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள... மேலும் பார்க்க

இணைப்பு: நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சீா்காழி வட்டம், திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம... மேலும் பார்க்க