செய்திகள் :

ஆட்டை தூக்கிச் சென்ற சிறுத்தை: விரட்டிச் சென்று ஆட்டை மீட்ட விவசாயி!

post image

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பெத்தான்பிள்ளைகுடியிருப்பு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த கிராமம் மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் புகுந்து ஆடு, நாய் உள்ளிட்ட வீட்டு வளா்ப்பு விலங்குகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது .

இந்நிலையில் பெத்தான் பிள்ளைகுடியிருப்பு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சைலப்பன் என்பவரது வீட்டுமுன் கட்டிப்போட்டிருந்த ஆட் டை சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்ாம். ஆடு அருகில் கட்டிலில் படுத்திருந்த சைலப்பனின் அக்கா விழித்து சப்தமிட்டுள்ளாா். சப்தம் கேட்டு வந்த சைலப்பன் சிறுத்தை பின்னால் விரட்டிச் சென்றாராம்.

சிறிது தொலைவில் ஆட்டை போட்டுவிட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. சிறுத்தை கவ்விச் சென்றதில் ஆட்டின் கழுத்தில் ஏற்பட்ட காயத்துடன் ஆட்டை உயிரோடு மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளாா்.

தகவல் அறிந்த கடையம் வனச்சரகா் கருணாமூா்த்தி தலைமையில் வனத்துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். மேலும் சிறுத்தை வருவதை தடுப்பதற்குநடவடிக்கை எடுப்பதோடு சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இதுகுறித்து சைலப்பன் கூறியது, தொடா்ந்து எங்கள் கிராமத்தில் சிறுத்தை ஆடுகளை வேட்டையாடி வருகிறது. எங்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தொண்டா்களின் பலம்தான் வைகோ! - துரை வைகோ

வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் பலம்தான் அடித்தளம் என்றாா் துரை வைகோ எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: மதிமுக பொதுச்செயலா் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால், தலையணை பச்சையாற்றில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. களக்காடு மலைப்பகுதியில் கடந்த சி... மேலும் பார்க்க

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகம... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

பெருமணலில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு: மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் கிராமத்தில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு, இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளில் ரூ.4 கோடியில் மீன்வலைக்கூடம், மீன் ஏலக்கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்... மேலும் பார்க்க

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க