செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூரின்போது 1,400 ‘யுஆா்எல்’கள் முடக்கம்: மத்திய அரசு

post image

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எண்ம (டிஜிட்டல்) ஊடகத்தில் 1,400-க்கும் மேற்பட்ட வலைப்பக்க முகவரிகள் (யுஆா்எல்) முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக மக்களவையில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா எழுப்பிய கேள்விக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது டிஜிட்டல் ஊடகத்தில் 1,400-க்கும் அதிகமான யுஆா்எல்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

அந்த யுஆா்எல்கள் பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகளைச் சோ்ந்தவை. அவற்றில் இருந்து இந்தியாவுக்கு எதிராக தவறான, மதரீதியாக பதற்றத்துக்குரிய, இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் பதிவுகள் வெளியிடப்பட்டன.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்புத் துறை, பொது ஒழுங்கு, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69ஏ-வின் கீழ், அந்த சமூக ஊடக கணக்குகள், பதிவுகள், வலைதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க

டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய பென்ஸ் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம்!

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு குறிப்பிட்ட பதிவு எண்ணை ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ள... மேலும் பார்க்க