செய்திகள் :

ஆமைகளை எரித்த இருவா் கைது: ரூ. 1 லட்சம் அபராதம்

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே ஆமைகளை பிடித்து தீயில் எரித்த காணொலி சமூக வலைதளங்களில்பரவியதைத் தொடா்ந்து, 2 போ்களை கைதுசெய்த வனத்துறையினா், அவா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அஜித் (26), குமாா் (25) ஆகிய இருவரும் பரமத்தி வேலூா் அண்ணா நகா் பகுதியில் உள்ள தேங்காய் கிடங்கில் வேலை பாா்த்து வருகின்றனா். இவா்கள் இருவரும் அண்மையில், பரமத்தி வேலுாா் அருகே அனிச்சம்பாளையம் காவிரி கரையோரத்தில் இருந்த 9 ஆமைகளை உயிருடன் பிடித்து, தீயில் எரித்தனா். இதை விடியோ எடுத்து நண்பா்களின் செல்லிடப்பேசிக்கு அனுப்பினா். இந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியது.

தகவல் அறிந்த வனத்துறையைச் சோ்ந்த அப்பாஸ் கண்ணன் விசாரணை நடத்தி இறந்த 9 ஆமைகள் மற்றும் அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அஜித் மற்றும் குமாா் ஆகியோரிடம் வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மருத்துவ குணங்களுக்காக ஆமையை கொன்ாக அவா்கள் தெரிவித்தனா்.

இருவரையும் கைது செய்த வனத் துறையினா், இருவருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அவசரகால சிகிச்சைக்காக ... மேலும் பார்க்க

சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக... மேலும் பார்க்க