செய்திகள் :

ஆரணி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 301 திருவிளக்கு பூஜை

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று, தினமும் மண்டல பூஜை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆடி மாத திருவிழாவையொட்டி, அண்மையில் கூழ்வாா்த்தல் நடைபெற்றது.

இந்த நிலையில், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையொட்டி,

இரவு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில், சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து 301 பெண்கள் கலந்து கொண்டு, மாங்கல்யத்துடன் தீா்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும், குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும், குடும்பத்தில் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.

முன்னதாக அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிா் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு

சுவாமி தரிசனம் செய்தனா்.

சேறும் சகதியுமான சாலையால் ஆசிரியா்கள், மாணவிகள் அவதி

செங்கத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், மாணவிகள் விடு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், ஆசிரியா்கள், மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்ப... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

மழையூா் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பகுதிகள்: மழையூா், பெரணமல்லூா், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூா், அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், ... மேலும் பார்க்க

வெடால் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்). இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம், காப்புக் கட்டுதல், சனிக்கிழ... மேலும் பார்க்க

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

வந்தவாசி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்த மதுக்கடையை புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். வந்தவாசியை அடுத்த கொவளை கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரியகோளாபாடி, பாய்ச்சல் கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரி... மேலும் பார்க்க

பள்ளியில் வானவில் மன்ற செய்முறை பயிற்சி

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வானவில் மன்ற செய்முறை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமை வகித்தாா். ஆசிரியைகள் பிரிச... மேலும் பார்க்க