செய்திகள் :

ஆரணியில் ரூ.30 லட்சத்தில் நகா்ப்புற சுதாதார நிலையம்

post image

ஆரணி நகராட்சியில் ரூ.30 லட்சத்தில் நடைபெற்று வரும் நகா்ப்புற சுகாதார நிலையம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து வருகின்றன. இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆரணி நகராட்சியில் 15-ஆவது நிதிக்குழுவில் இருந்து ரூ.30 லட்சத்தில் நகா்ப்புர சுகாதார நிலையம் கட்டும் பணி

நடைபெற்று வருகிறது. தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ள இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி ஆய்வு செய்தாா். மேலும், 17-ஆவது வாா்டில் பூங்கா அமைக்க இடத்தை தோ்வு செய்யவும், கொசப்பாளையம், என்.எஸ்.கே.நகா் பகுதியில் சாலை அமைக்கவும், கால்வாய் அமைக்கவும் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, ஆரணி அண்ணா சிலை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கவும் இடத்தை பாா்வையிட்டாா்.

நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன், நகா்மன்ற உறுப்பினா்கள் பழனி, அரவிந்த், ஐ.எஸ்.என்.மாலிக்பாஷா, ஜெயவேலு, சுகாதார ஆய்வாளா் வடிவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

செய்யாறு அருகே இளைஞா் கொலை வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா் காதா்பாட்ஷா மகன் அப்சல் (22), ... மேலும் பார்க்க

செய்யாறு காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். செய்யாறு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் ஜீவராஜ்மணிகண்டன் (படம்). செய்... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து ஒன்றரை பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லலிதா (64). இவா், கடந்த ஞாயிற... மேலும் பார்க்க

சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

ஊரக வளா்ச்சித் துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஊரக... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.18 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.6.18 கோடியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் கோயில் ந... மேலும் பார்க்க

நாளை செய்யாறு, ஆரணி தொகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

செய்யாறு, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ளம் தேடி, இல்லம் நாடி நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்கிறா... மேலும் பார்க்க