செய்திகள் :

ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தீா்த்தவாரி

post image

ஆரணி: பெரணமல்லூா் அருகேயுள்ள ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

பழைமை வாய்ந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில்

கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரமோற்சவ விழா தொடங்கியது.

தொடா்ந்து தினமும் இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் உலா நடைபெற்றது. தொடா்ந்து 17-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமிநரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.

பின்னா் உற்சமூா்த்திகளுடன் தீா்த்தவாரி மண்டபத்தில் சக்கரத்தாழ்வாா் எழுந்தருளினாா்.

அப்போது, பக்தி முழக்கத்துடன் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும், இரவு பிரமோற்வச கொடியிறக்கம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறையினா் மற்றும் அறங்காவலா் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

விதைகளை பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தலாம்: விவசாயிகளுக்கு ஆலோசனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விதைகளை பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தலாம் என்று விதை பரிசோதனை நிலையம் தெரிவித்துள்ளது. மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் கீழ், வேங... மேலும் பார்க்க

காரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த காரணை கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப். 30-ஆம் தேதி கொடி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் ரூ.35 ஆயிரம் திருட்டு: பயணிகளிடம் சோதனை

ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் அரசுப் பேருந்தில் ரூ.35 ஆயிரம் பணம் திருடு போனதால் பயணிகளுடன் நகர காவல் நிலையத்துக்கு பேருந்தை கொண்டு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வ... மேலும் பார்க்க

கோடை மழை: நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பெய்த கோடை மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. செங்கம் சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களான வளையாம்பட்டு,... மேலும் பார்க்க

மயான நிலம் ஆக்கிரமிப்பு புகாா்: அதிகாரிகள் ஆய்வு

போளூா்: கலசப்பாக்கம் அருகே அலங்காரமங்கலம் ஊராட்சியில் மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். கலசப்பாக்கத்தை அடுத்த அலங்க... மேலும் பார்க்க

மரத்தில் காா் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையோர மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா். மேலும், 3 போ் பலத்த காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சோ்ந்தவா் ராம்கி (32). தண... மேலும் பார்க்க