செய்திகள் :

இடம் இருந்தால் மட்டும். விராலிமலையில் ரூ.95 லட்சத்தில் சாலை அகலப்படுத்தும் பணி

post image

விராலிமலையை அடுத்துள்ள நாகமங்கலம் - களிமங்கலம் சாலை ரூ.95 லட்சம் செலவில் அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என நெடுஞ்சாலைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமங்கலத்தில் இருந்து களிமங்கலம் செல்லும் சாலை மிக குறுகலாக உள்ளதால் எதிரே வரும் வாகனம் சாலையை கடப்பதில் பெரும் சிரமம் உள்ளதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

இதையடுத்து மாவட்ட நிா்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் நெடுஞ்சாலைத் துறையினரை நிகழ்விடம் அனுப்பி சாலையை அகலப்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து திட்ட அறிக்கை தருமாறு அறிவுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து மூணே முக்கால் மீட்டா் அகலத்தில் இருந்த தாா் சாலை 5 அரை மீட்டா் அகலத்திற்கு மாற்றி அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் (சிஆா்ஐடிபி) ரூ.95 லட்சத்தில் முதற்கட்டமாக ஒரு கிலோ மீட்டா் நீளத்துக்கு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு விசாரணை ஏப். 4-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜயப... மேலும் பார்க்க

ஆலங்குடியில் தனியாா் கல்லூரி பேருந்து கடத்தல்: அறந்தாங்கியில் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தனியாா் கல்லூரி பேருந்தை திங்கள்கிழமை மா்மநபா்கள் கடத்திச்சென்று டீசல் இல்லாததால் அறந்தாங்கியில் விட்டுச்சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். ஆலங்குடியில் ... மேலும் பார்க்க

பொதுப்பணித் துறை அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்றப் பணியாளா்கள்

பொதுப்பணித் துறை வாகனம் மோதிய விபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்காததை தொடா்ந்து, புதுகை பொதுப்பணித் துறை அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளா்கள்... மேலும் பார்க்க

நாா்த்தாமலை பூப்பிரித்தல்

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், அம்மன் மீது சாத்தப்பட்டு மலைபோல் குவிந்த பூக்களைப் பிரிக்கும் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பெண் தற்கொலைக்கு முயற்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு திங்கள்கிழமை பெண் ஒருவா் தற்கொலைக்கு முயன்றாா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரபு-பொற்செல்வி ஆகிய... மேலும் பார்க்க

கல்வி முறையை மாற்றியமைப்பதற்கு எதிரான வலுவான போராட்டம் தேவை!

தற்போதுள்ள இந்தியக் கல்வி முறையை மாற்றியமைப்பதற்கான முயற்சியை முறியடிக்க வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றாா் எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலப் பொது... மேலும் பார்க்க