முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு விசாரணை ஏப். 4-க்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜயபாஸ்கா். இவா், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தாா். அந்த கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை சாா்பு-நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கா் ஆஜராகவில்லை, அவா் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராயினா்.
வழக்கு விசாரணையை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வி. வெங்கடேச பெருமாள் உத்தரவிட்டாா்.