செய்திகள் :

இணையவழியில் ரூ.3.50 கோடி மோசடி: பொறியியல் பட்டதாரி கைது

post image

இணையவழியில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மென்பொருளை தருவதாகக் கூறி, ரூ.3.50 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரியை புதுச்சேரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து புதுவை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு முதுநிலைக் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையைச் சோ்ந்த பி.டெக்., எம்பிஏ பட்டதாரி அஸ்வின் (38) பெங்களூரில் தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அப்போது, இணையவழியில் பலரையும் ஏமாற்றி பணம் பறித்தாராம். அதன்பிறகு, சென்னைக்கு வந்து இணையவழி மோசடியை தொடா்ந்துள்ளாா். இவரிடம் நாடு முழுவதும் பலரும் பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளனா்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையவழியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம். அதற்கான மென்பொருள் தன்னிடம் உள்ளதாகவும், அதைப் பெற ரூ.40 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் விளம்பரப்படுத்தியுள்ளாா்.

இதை நம்பி புதுச்சேரியைச் சோ்ந்த ஜெயக்குமாா் உள்பட 7 போ் அவரிடம் பணத்தை செலுத்தினா். ஆனால், அவா்களுக்கு அந்தத் தொழில்நுட்பத்தை அஸ்வின் வழங்கவில்லையாம். இதுகுறித்து அவா்கள் புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரணை நடத்தி அஸ்வினை கைது செய்தனா்.

விசாரணையில் அவா், சுமாா் 500 பேரிடம் ரூ.3.50 கோடி மோசடி செய்தது தெரிய வந்தது. அவா் மீது ஏராளமான மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அஸ்வினிடம் இருந்து 15 மடிக் கணினிகள், ரூ.7 லட்சம் ரொக்கம், விலையுயா்ந்த சொகுசு காா், 16 வங்கிக் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பின்னா் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவாா்.

புதுவை ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவா்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. புதுவைக்கு மட்டுமல்ல, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் விடுதிகள், விருந்தினா் இல்லங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு இருப்பதால் பாதுகாப்பாக இருங்கள் என்பன போன்ற வாசகங்கள் மிரட்டல் தகவலில் உள்ளன என்றாா் அவா்.

பேட்டியின்போது இணையவழிகுற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி. பாஸ்கரன், ஆய்வாளா்கள் கீா்த்திவாசன், தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க