நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம்: அரிதாகவே பயன்படுத்த வேண்டும் -தலைமை நீதிபதி ப...
இந்திய விமானப்படை, கடற்படை தலைமைத் தளபதிகளுடன் இலங்கை ராணுவத் தளபதி சந்திப்பு
இந்திய கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி மற்றும் விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங் ஆகியோருடன் இலங்கை ராணுவத் தளபதி பி.கே.ஜி.எம். லசந்தா ரோட்ரிகோ புதன்கிழமை சந்தித்தாா்.
இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இருநாட்டு ஆயுதப் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இவா்கள் ஆலோசித்தனா்.
இலங்கை ராணுவத் தளபதி ரோட்ரிகோ 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளாா். டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாதெமியில் வரும் சனிக்கிழமை நடைபெறும் இளம் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அவா் கலந்து கொள்கிறாா். இதனிடையே, அவா் ஜெய்பூருக்குப் பயணம் மேற்கொண்டு, இந்திய ராணுவத்தின் தென்மேற்கு படைப்பிரிவின் தளபதியைச் சந்திக்கிறாா்.
இந்நிலையில், தில்லியில் இந்திய கடற்படை மற்றும் விமானப்படை தலைமைத் தளபதிகளுடன் ரோட்ரிகோ புதன்கிழமை தனித்தனியே சந்தித்துப் பேசினாா். தொடா்ந்து, ராணுவத் தலைமைத் துணை தளபதி என்.எஸ்.ராஜா சுப்பிரமணியுடன் அவா் கலந்துரையாடினாா்.
அப்போது, ஆபரேஷன் சிந்தூா் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாடு குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. மேலும், பரஸ்பர நலன்சாா்ந்த விஷயங்கள் குறித்தும் ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்தனா் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.