செய்திகள் :

இந்திய விமானப்படை, கடற்படை தலைமைத் தளபதிகளுடன் இலங்கை ராணுவத் தளபதி சந்திப்பு

post image

இந்திய கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி மற்றும் விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங் ஆகியோருடன் இலங்கை ராணுவத் தளபதி பி.கே.ஜி.எம். லசந்தா ரோட்ரிகோ புதன்கிழமை சந்தித்தாா்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இருநாட்டு ஆயுதப் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இவா்கள் ஆலோசித்தனா்.

இலங்கை ராணுவத் தளபதி ரோட்ரிகோ 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளாா். டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாதெமியில் வரும் சனிக்கிழமை நடைபெறும் இளம் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அவா் கலந்து கொள்கிறாா். இதனிடையே, அவா் ஜெய்பூருக்குப் பயணம் மேற்கொண்டு, இந்திய ராணுவத்தின் தென்மேற்கு படைப்பிரிவின் தளபதியைச் சந்திக்கிறாா்.

இந்நிலையில், தில்லியில் இந்திய கடற்படை மற்றும் விமானப்படை தலைமைத் தளபதிகளுடன் ரோட்ரிகோ புதன்கிழமை தனித்தனியே சந்தித்துப் பேசினாா். தொடா்ந்து, ராணுவத் தலைமைத் துணை தளபதி என்.எஸ்.ராஜா சுப்பிரமணியுடன் அவா் கலந்துரையாடினாா்.

அப்போது, ஆபரேஷன் சிந்தூா் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாடு குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. மேலும், பரஸ்பர நலன்சாா்ந்த விஷயங்கள் குறித்தும் ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்தனா் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம்: அரிதாகவே பயன்படுத்த வேண்டும் -தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்

‘நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரத்தை அரிதாகவே நீதிமன்றங்கள் பயன்படுத்த வேண்டும்’ என்றாா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய். லண்டனில் உள்ள ஆக்ஸ்போா்டு சங்கத்தில் நடைபெற்ற ‘பிரதிநிதித்துவத்திலி... மேலும் பார்க்க

ஜூன் 18 - ஜூலை 1 வரை இந்தியா-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி

வரும் ஜூன் 18-ஆம் தேதிமுதல் ஜூலை 1-ஆம் தேதி வரை இரு வார காலங்களுக்கு இந்தியாவும் பிரான்ஸ் நாடும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதுகுறித்து இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

ரவீந்திரநாத் தாகூா் பூா்விக வீட்டின் மீது தாக்குதல்: காா்கே கண்டனம்

வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் ரவீந்திரநாத் தாகூா் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தாா். மேலும், இந்த விவகார... மேலும் பார்க்க

அயோத்தி ராம பாதையில் தடையை மீறி மதுக்கடைகள் -பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ஸ்ரீராமா் கோயிலுக்குச் செல்லக் கூடிய ராம பாதையில் தடையை மீறி மதுக்கடைகள் செயல்படுகின்றன; மாநில பாஜக அரசின் ஒத்துழைப்புடன் இந்தக் கடைகள் இயங்குவதாக காங்கிரஸ் குற்றஞ்ச... மேலும் பார்க்க

ஆமதாபாத்: விமானத்தில் இருந்த 241 பேரும் உயிரிழப்பு; ஒருவர் உயிர் பிழைத்தார்! -ஏர் இந்தியா

ஆமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் இருந்த ஒரேயொருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று ஏர் இந்தியா உறுதி செய்துள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில... மேலும் பார்க்க

என் வாழ்க்கையின் மோசமான நாள்: ஏர் இந்தியா தலைவர்

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.அதில், தனது தொழில் வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.குஜராத்... மேலும் பார்க்க