செய்திகள் :

இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் நாள்கள் முடிவுக்கு வந்துவிட்டன: டிரம்ப் பேச்சு

post image

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், சீனாவில் வணிக நிறுவனங்கள் அமைப்பதற்கும் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது மற்ற நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது.

அந்தவகையில் புதன்கிழமை செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், நாட்டின் நலனுக்காக ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்துப் பேசினார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான மூன்று நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அப்போது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாடுகளில் குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதை கடுமையாக எதிர்த்துள்ளார்.

"நீண்ட காலமாக அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையின் பெரும்பகுதி தீவிரமான உலகமயமாக்கலைப் பின்பற்றியது. இது லட்சக்கணக்கான அமெரிக்கர்களை நம்பிக்கையற்றவர்களாகவும் துரோகிகளாகவும் உணர வைத்தது.

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல சீனாவில் தொழிற்சாலைகளை நிறுவி அவற்றில் இந்தியாவில் இருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அமெரிக்காவின் சுதந்திரத்தை சீர்குலைத்துள்ளன என்று உங்களுக்குத் தெரியும். அதேநேரத்தில் அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்ததும் நடந்தது. அந்த நாள்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. அமெரிக்காவின் நலனுக்காக இந்த அணுகுமுறையை நோக்கி மாற வேண்டியுள்ளது.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகம் பேரை வேலைக்கு அமர்த்துகின்றனர். இந்த நிறுவனங்கள் இனி உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

No more tech hiring in India, Donald Trump tells Google, Microsoft and others to focus on Americans

காஸாவில் கடந்த 3 நாள்களில் பசியால் 21 குழந்தைகள் மரணம்!

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க

துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!

துருக்கியில், இ3 நாடுகள் (E3) மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (ஜூலை 25) துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில், இ3 என்றழைக்கப்படும் ஜெர்மனி, பி... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு!

அரசியல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் பதிவிட அந்நிறுவனம் தடை விதிக்கவுள்ளது.அமெரிக்காவைs சேர்ந்த மெட்டா நிறுவனம் தங்கள் சமூக ஊடக தளங்களில் (வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன... மேலும் பார்க்க

வியட்நாமில் பேருந்து விபத்து: குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

வியட்நாமில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த பேர... மேலும் பார்க்க