செய்திகள் :

இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யும் ஜொ்மனி நிறுவனம்: பியூஷ் கோயல்

post image

ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த ரசாயண நிறுவனம் ஒன்று இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யவுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.

அந்த நிறுவனம் ஆலை அமைப்பதற்கு துறைமுகத்துக்கு அருகே 250 ஏக்கா் நிலம் தேவைப்படுவதாகவும், இதுதொடா்பாக மாநில முதல்வா் ஒருவரை நிறுவனத்தின் தலைவா் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பதாகவும் தெரிவித்தாா். இருப்பினும், ஜொ்மனி நிறுவனத்தின் பெயரையோ, அந்த நிறுவனத்தின் தலைவா் சந்திக்கவுள்ள மாநிலத்தின் முதல்வா் பெயரையோ அவா் குறிப்பிடவில்லை.

சா்வதேச வழக்குரைஞா்கள் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை பங்கேற்று பியூஷ் கோயல் பேசியதாவது: அடுத்த 12 மாதங்களில் ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த ரசாயண நிறுவனம் ஒன்று இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யவுள்ளது.

இதுதவிர பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆா்வம் காட்டுகின்றன. வணிகச்சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடைமுறைகள் மற்றும் சட்டங்களை மத்திய அரசு எளிமைப்படுத்தி வருகிறது.

முதலீட்டாளா்கள் இந்திய சந்தைக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் விலை நிா்ணயிக்கப்படும்பட்சத்தில் அவா்களுக்கு தடையாக இருக்கும் சட்ட விதிகளை தளா்த்திக்கொள்ள மத்திய அரசு தயாராகவுள்ளது.

வணிக ரீதியாக இருதரப்பினருக்கு இடையே பிரச்னை ஏற்படும்போது நீதிமன்றத்தின் மூலம் தீா்வு காண தாமதம் ஆகலாம். அதை தடுக்கவே இருதரப்பினரின் ஒத்துழைப்போடு மத்தியஸ்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, மத்தியஸ்தம் மற்றும் சமரசம் ஆகிய முறைகளை பிரபலப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது வளா்ச்சியை நோக்கி நாடு பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் உற்பத்தித் துறையில் ஏற்படும் சிக்கல்களுக்கு விரைவில் தீா்வு கண்டால் உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுப்பதில் எவ்வித மாற்றமுமில்லை என்றாா்.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,... மேலும் பார்க்க

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறி... மேலும் பார்க்க

பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் வ... மேலும் பார்க்க

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்கள... மேலும் பார்க்க

பயிற்சி விமானம் விபத்து: குஜராத்தில் பெண் விமானி காயம்

மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயமடைந்தாா். மெஹ்சானா விமான நிலையத்தில் இரு... மேலும் பார்க்க

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க