இன்று போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை (மே 29) நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வகையில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியானது.
இதையடுத்து, ஓராண்டு தாமதமாக 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல்கட்ட பேச்சுவாா்த்தை கடந்த ஆண்டு ஆக.27-இல் நடைபெற்றது.
தொடா்ந்து 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் வியாழக்கிழமை (மே 29) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.