செய்திகள் :

இபிஎஸ் கூட்டத்தில் மூவரிடம் ரூ. 2 லட்சம் பிக்பாக்கெட்!

post image

கோவை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டத்துக்கு வருகை தந்திருந்த மூவரிடம் ரூ. 2 லட்சம் பணம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது.

’மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் இருந்து திங்கள்கிழமை காலை தொடங்கினார்.

மேட்டுப்பாளையம் தொகுதி தேக்கம்பட்டியில் அமைந்துள்ள வனப்பத்திரகாளியம்மன் கோயிலில் இன்று காலை தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி, அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் சூளை உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்தக் கூட்டத்துக்கு வந்து மண்டபத்துக்கு வெளியே காத்திருந்த தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் என்பவர் பேன்ட் பாக்கெட்டை பிளேடால் வெட்டிய மர்ம நபர்கள், அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பிக்பாக்கெட் அடித்துள்ளனர்.

அதேபோல், நெல்லித்துறையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆனந்த் என்பவரிடம் ரூ.1 லட்சமும், அபு என்பவரிடம் ரூ. 2,500 -ம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேட்டுபாளையம் போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Three people who had attended a meeting attended by AIADMK General Secretary Edappadi Palaniswami were robbed of Rs. 2 lakh.

இதையும் படிக்க : தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் சாலை, மேம்பால பணிகளுக்காக ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை இன்று(ஜூலை 7) வெளியிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 3,268 கி.மீ. சாலை மற்றும் மேம்பால பணிகளுக்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்கள் மூடலா? - அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு!

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவ... மேலும் பார்க்க

கணவர் இறந்தது தெரியாமல்..எலி செத்ததாக நினைத்திருந்த மனைவி!

கோவையில் கணவன் இறந்து கிடந்தது தெரியாமல் வீட்டிற்குள் வசித்த மனைவி, துர்நாற்றத்தை எலி செத்ததால் வந்தது என நம்பிய சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர... மேலும் பார்க்க

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், ம... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: தவெக போராட்டத்துக்கு அனுமதி!

அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக நடத்தவுள்ள போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவக... மேலும் பார்க்க

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம்!

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சேலம் மாநகரின் காவல் தெ... மேலும் பார்க்க