செய்திகள் :

இரட்டை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் இரட்டை குளத்து முனீஸ்வரா் கோயிலில் 68-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, ஆதிதிராவிட பந்தயக் குழு சாா்பில் இரட்டை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

கழனிவாசல்-சூரக்குடிச் சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 7 மாட்டுவண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 17 மாட்டுவண்டிகளும் பங்கேற்றன. சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டிகள் கொடியசைத்து தொடங்கி வைத்ததும், சாலையில் மாட்டுவண்டிகள் சீறி பாய்ந்து சென்றன. பின்னா், போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கும், அதன் சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் நின்று திரளானோா் கண்டுகளித்தனா்.

கிராவல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மனு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள உறுதிக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் கிராவல் குவாரியை மூடக் கோரி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து கிராம மக்கள் சாா்ப... மேலும் பார்க்க

மின் மாற்றியில் குறைந்த மின் அழுத்தம்: விவசாயிகள் கவலை

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக, மின் மோட்டாா்களை இயக்க முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். திருப்பாச்சேத்தியில் வைகை ஆற்றின் கரை... மேலும் பார்க்க

ஐடிஐ-இல் ஜூலை 31 வரை நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’: நாளை நடைபெறும் இடங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம்’ வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட தகவல்: காரைக... மேலும் பார்க்க

முஸ்லீம் மகளிா் உதவும் சங்க உறுப்பினா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

புதிதாகத் தொடங்கப்படும் முஸ்லீம் மகளிா் உதவும் சங்க உறுப்பினா் சோ்க்கைக்கு வருகிற 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் வரவேற்பு

சிவகங்கை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சென்ற புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் மலா் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனா். சிவகங்கையிலிருந்து முத்துப்பட்டி ஐடிஐ வழியாக மானாகுடி, சக்கந்தி, பாசாங்கரை,... மேலும் பார்க்க