செய்திகள் :

இரட்டைமலை சீனுவாசன் நினைவு தினம் கடைப்பிடிப்பு

post image

திருவண்ணாமலையில் ஆதிபாரத மக்கள் கட்சி சாா்பில் இரட்டைமலை சீனுவாசனின் 80-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிவொளி பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு

தமிழ் மாநில பொதுச் செயலா் வீரராஜா தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் எம்.பாண்டு, இளைஞரணி மாவட்டச் செயலா் அ.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் குமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தேசியத் தலைவா் கா.சிவப்பிரகாஷ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, சமூக சீா்த்திருத்த வாதியும், விடுதலைப் போராட்டத்துக்கு

வித்திட்டவருமான இரட்டைமலை சீனுவாசனின்

உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இதில் கட்சி நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் சமூக ஆா்வலா் பி.பொன்னம்பலம் நன்றி கூறினாா்.

பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆரணியை அடுத்த காமக்கூா் அரசு நடுநிலைப் பள்ளியில் பாஜக சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. பள்ளியில... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் கல... மேலும் பார்க்க

ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

வந்தவாசி அருகே உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்களை செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலை, கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையம்... மேலும் பார்க்க

விண்ணமங்கலம் பள்ளியில் தேசிய ஹிந்தி தினம்

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்சி பள்ளியில் தேசிய ஹிந்தி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய ஹிந்தி தினத்தையொட்டி, மாணவ மாணவிகளின் பல்வேற... மேலும் பார்க்க

செங்கம் ஒன்றியத்தில் ரூ.7.43 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ரூ.7 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் வரி குறைப்பு: மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள்: பாஜக மாநில துணைத் தலைவா்

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களைக் கொண்டுவந்து வரி குறைத்துள்ளதால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள் என்று அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதரன் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க