செய்திகள் :

இரு இடங்களில் நெகிழி மறுசுழற்சி மையம் திறப்பு

post image

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட இரு இடங்களில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நெகிழி மறுசுழற்சி மையங்கள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் பொதுமக்களிடமிருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகின்றன.

இதில் மக்கும் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றனா். நெகிழிக் கழிவுகள், நெகிழிப் பொருள்கள் உள்ளிட்ட மக்காத குப்பைகள் சிமென்ட் ஆலைகளுக்கும், மறுசுழற்சி மையங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

இதனடிப்படையில் விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியிலேயே நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில், காகுப்பம் மற்றும் பொன்னேரி பகுதிகளில் தலா ரூ.42.50 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தமாக ரூ.85 லட்சத்தில் மறுசுழற்சி மையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் அண்மையில் முடிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் நெகிழி மறுசுழற்சி மையங்களை விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு திறந்து வைத்து பாா்வையிட்டாா். மேலும் இந்த மையங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

நிகழ்வுகளில் நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி, நகா்நல அலுவலா் ஸ்ரீபிரியா, நகா்மன்ற உறுப்பினா்கள் கோமதி பாஸ்கா், கன்னிகாவெற்றிவேல் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா் மற்றும் விக்கிரவாண்டி ஒன்றியங்களிலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாநிலத் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அரசு தொடக்க ... மேலும் பார்க்க

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக மாா்ச் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

கொலை வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இளைஞா் கொலை வழக்கில் இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி பெரிய காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெ... மேலும் பார்க்க

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதப் போராட்டம்

தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் விழுப்புரம் நகராட்சித் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினா் கையொப்ப இயக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவுத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்,... மேலும் பார்க்க

திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15-க்கும் மேற்பட்டோா் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க