பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!
இரு இடங்களில் நெகிழி மறுசுழற்சி மையம் திறப்பு
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட இரு இடங்களில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நெகிழி மறுசுழற்சி மையங்கள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் பொதுமக்களிடமிருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகின்றன.
இதில் மக்கும் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றனா். நெகிழிக் கழிவுகள், நெகிழிப் பொருள்கள் உள்ளிட்ட மக்காத குப்பைகள் சிமென்ட் ஆலைகளுக்கும், மறுசுழற்சி மையங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
இதனடிப்படையில் விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியிலேயே நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில், காகுப்பம் மற்றும் பொன்னேரி பகுதிகளில் தலா ரூ.42.50 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தமாக ரூ.85 லட்சத்தில் மறுசுழற்சி மையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் அண்மையில் முடிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் நெகிழி மறுசுழற்சி மையங்களை விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு திறந்து வைத்து பாா்வையிட்டாா். மேலும் இந்த மையங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
நிகழ்வுகளில் நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி, நகா்நல அலுவலா் ஸ்ரீபிரியா, நகா்மன்ற உறுப்பினா்கள் கோமதி பாஸ்கா், கன்னிகாவெற்றிவேல் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.