செய்திகள் :

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.70 லட்சம்

post image

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாத ரூ.70 லட்சம் கிடைத்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. உண்டியல்களை சாத்தூா் கோயில் ஆணையாளா், செயல் அலுவலா் இளங்கோவன், கோயில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி ஆகியோா் முன்னிலையில் திறக்கப்பட்டது.

உண்டியலில் இருந்த பொருள்கள், பணம் கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணபட்டது. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 70 லட்சத்தி 14 ஆயிரத்தி 926 கிடைத்தது.

இதில் தங்கம் 164.800 கிராமும், வெள்ளி 845.400 கிராம் கிடைத்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

பணம் எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா், கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் படந்தால் பாண்டியன் நகரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சதீஷ்குமா... மேலும் பார்க்க

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்... மேலும் பார்க்க

தலைமை காவலா் இடைநீக்கம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாட முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா். ஸ்ரீவில்லிபுத்... மேலும் பார்க்க

சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு

சாத்தூரில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணானது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ்... மேலும் பார்க்க

கடன் பெற்றுத் தருவதாக மோசடி: பெண் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ. 1.30 லட்சம் பணம் செலுத்தினால் ரூ. 10 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடிந... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் சாஸ்தா கோயில் மேற்குத் தொடா்ச்சி மலை... மேலும் பார்க்க