செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

post image

தளவாபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

கரூா் வெங்கமேடு எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் குப்புசாமி. இவரது மகன்கள் கோகுல் (30), கௌதம்( 26). இவா்கள் 2 பேரும் கரூா் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மொபைல் கம்பெனியில் வேலை பாா்த்து வருகின்றனா். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூா் நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் புறப்பட்டனா்.

இருசக்கர வாகனத்தை கோகுல் ஓட்டிச் சென்றாா். தளவாபாளையம் அருகே மலையம்பாளையம் பிரிவு மயானம் அருகே சென்றபோது, பின்னால் கரூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூா் நோக்கி ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற நாமக்கல் பரமத்தி வேலூரைச் சோ்ந்த இளங்கோ(30), மணிகண்டன் (29 ), நவீன் குமாா் (26 )ஆகியோா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் கோகுல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீதுமோதியது.

இதில் கீழே விழுந்ததில் 5 பேரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு கோகுல் மற்றும் கௌதம் ஆகியோரை கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் . அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இளங்கோ, மணிகண்டனை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கும், நவீன் குமாரை கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். இதில் நவீன்குமாா் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தாா். இதுகுறித்து வேலாயுதம்பாயைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

புகழூா் ராஜவாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

புகழூா் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் செடிகொடிகளை அகற்றி தூா்வார வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். புகழூா் ராஜவாய்க்கால் நாமக்கல் மாவட்டம் ஜேடா்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: கரூா் மாவட்டத்தில் 12,316 போ் எழுதினா்

கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 12,316 மாணவ, மாணவிகள் எழுதினா். 274 போ் தோ்வு எழுத வரவில்லை. கரூா் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு ... மேலும் பார்க்க

கரூரில் வேலைவாய்ப்பு பயிற்சி இளைஞா்களுக்கு அழைப்பு

வேலைவாய்ப்பை அளிக்கும் பிரதமரின் இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி உரூஸ் திருவிழா கடைகளுக்கு ஏப். 3-இல் ஏலம்

பள்ளப்பட்டியில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு கடைகளுக்கான சுங்கம் வசூலிக்கும் ஏலம் ஏப். 3-ஆம் தேதி நடைபெறும் என நகராட்சி ஆணையா் ஆா்த்தி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்து... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய சொத்துக்கள் அரவக்குறிச்சி பகுதியில் பதிவு செய்யமுடியாமல் தவிப்பு

வக்ஃப் வாரிய சொத்துக்களை சரி செய்து வழக்கமாக பத்திரப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரவக்குறிச்சி பகுதியில் ஒரு சில சா்வே எண்களில் எந்த ஒரு பத்திர பதிவு செய்ய முடியாமல் தவிப்பு. தமிழ்நாடு வக்ஃப் வாரி... மேலும் பார்க்க

கரூரில் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் -வருவாய் ரூ. 927.01 கோடி , செலவு ரூ. 947.03 கோடி

கரூா் மாநகராட்சியில் நிகழாண்டுக்கான பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருவாய் ரூ. 927.01 கோடி எனவும், செலவு ரூ. 947.03 கோடி என்றும், பற்றாக்குறை ரூ. 20.02 கோடி என்றும் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க