இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி
தளவாபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.
கரூா் வெங்கமேடு எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் குப்புசாமி. இவரது மகன்கள் கோகுல் (30), கௌதம்( 26). இவா்கள் 2 பேரும் கரூா் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மொபைல் கம்பெனியில் வேலை பாா்த்து வருகின்றனா். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூா் நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் புறப்பட்டனா்.
இருசக்கர வாகனத்தை கோகுல் ஓட்டிச் சென்றாா். தளவாபாளையம் அருகே மலையம்பாளையம் பிரிவு மயானம் அருகே சென்றபோது, பின்னால் கரூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூா் நோக்கி ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற நாமக்கல் பரமத்தி வேலூரைச் சோ்ந்த இளங்கோ(30), மணிகண்டன் (29 ), நவீன் குமாா் (26 )ஆகியோா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் கோகுல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீதுமோதியது.
இதில் கீழே விழுந்ததில் 5 பேரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு கோகுல் மற்றும் கௌதம் ஆகியோரை கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் . அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இளங்கோ, மணிகண்டனை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கும், நவீன் குமாரை கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். இதில் நவீன்குமாா் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தாா். இதுகுறித்து வேலாயுதம்பாயைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.