செய்திகள் :

இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாகக் கூறி ஓய்வுபெற்ற செவிலியரிடம் பணம் பறிப்பு

post image

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாகக் கூறி ஓய்வுபெற்ற செவிலியரை அழைத்துச் சென்று அவரது கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி ரூ. 50 ஆயிரத்தை பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதன்சந்தை பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி வசந்தகுமாரி ( 61). இவா், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவருக்கு சொந்தமான வீடு ராசிபுரம் அருகே பாலப்பாளையம் பகுதியில் உள்ளது.

இந்நிலையில், பாலப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அரசு திட்ட முகாமில் குடிநீா் இணைப்பு பெறுவது தொடா்பாக மனு அளிக்க புறப்பட்டாா். பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் தான் லிப்ட் தருவதாகக் கூறி, வசந்தகுமாரியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.

மூணுசாவடி அருகே ஆவுடையாா் சிவன் கோயில் பகுதியில் சென்றபோது, செம்மாம்பட்டி ஏரி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து செவிலியா் வசந்தகுமாரியை கீழே தள்ளிட்டு, அவா் அணிந்திருந்த 7 பவுன் நகையைப் பறிக்க முயன்றபோது முடியாததால், அவரது கைப்பையில் இருந்த ரொக்கம் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்றாா். இதுகுறித்து அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்தை பாா்வையிட்டு

புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் பணியின்போது அம்மன் சிலை கண்டெடுப்பு

திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை அருகே மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் அமைக்க குழி தோண்டியபோது அம்மன் சிலையை கண்டெடுத்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வையப்பமலையில் மின்னாம்பள்ளி கிரா... மேலும் பார்க்க

பரமத்தி பேரூராட்சியில் 32 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பகுதிகளில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களைப் பிடித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வா... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் அரசு மகளிா் பள்ளி கல்வி மேம்பாட்டுக்கு ரூ. 1 லட்சம் நிதி

சேந்தமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மேம்பாட்டுக்காக ரூ. 1 லட்சம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் பணிநிறைவு பெற்றோா் அமைப்பு சாா்பில் அதன் பொதுச் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் போலீஸ் குவிப்பு

நாமக்கல் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் காலி குடங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் குவிக்கப்பட்டனா். நாமக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளி... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,145 கோடி ஊக்கத்தொகை அளிப்பு: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்

கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 1,145.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சா்க்கரைத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். நாமக்கல் மாவட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இறந்தோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி

திருச்செங்கோடு வட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுதாரா்களுக்கு முதல்வா் பொது நிவாரண நிதியை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்... மேலும் பார்க்க