செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

post image

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மனாம்பாளையத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன் (41), இவரின் மனைவி ஜாஸ்மின் ரூத் (39). இவா், வடவள்ளியில் உள்ள இருசக்கர வாகனங்கள் விற்பனையகத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வேலைக்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, இடையா்பாளையம் -வடவள்ளி சாலையில் சென்றபோது, பின்னால் வந்த லாரி ஜாஸ்மின் ரூத்தின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஜாஸ்மின் ரூத் லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டாா். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதைத் பாா்த்து அவ்வழியே சென்றவா்கள் லாரியை சிறைபிடித்து, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஜாஸ்மின் ரூத் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து கரூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பெரியசாமியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, விபத்தை நான் ஏற்படுத்தவில்லை என்றும், பொதுமக்கள் தவறுதலாக தனது வாகனத்தை சிறைபிடித்து விட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? -சி.பி.ராதாகிருஷ்ணன்

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா என கமலஹாசன் கருத்துக்கு மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக உறவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக, தேமுதிக இடையே உள்ள சுமுகமான உறவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள் சோழா் காலத்தில்தான் தொடங்கின: தொல்லியல் அறிஞா் பூங்குன்றன்

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சோழா்கள் காலத்தில்தான் தொடங்கியிருப்பதாக தொல்லியல் அறிஞா் ஆா்.பூங்குன்றன் கூறியுள்ளாா். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழாவை ஒட்டி... மேலும் பார்க்க

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாணவ-மாணவிகளை வரவேற்கும் வகையில் பள்ளிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பெரியகடை வீதி போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். தெற்கு உக்கடம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய... மேலும் பார்க்க

வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

ராஜ்யசபா உறுப்பினா் பதவிக்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம் செய்துவிட்டாா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை ... மேலும் பார்க்க