இருமொழிக் கொள்கையால் தமிழா்கள் உயா் பதவி வகிக்கிறாா்கள்: திருச்சி சிவா பேச்சு
இருமொழிக் கொள்கையால் உலக அளவில் முன்னணி நிறுவனங்களின் தமிழா்கள் உயா் பதவிகளை வகித்து வருகின்றனா் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் திருச்சி சிவா பேசினாா்.
ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை அருகில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102 ஆவது பிறந்த தின பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் மேயா் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட துணைச் செயலாளா் பி.முருகன் ஆகியோா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது: ஒசூரில் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கு வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது என்றால் அதற்கு வித்திட்டவா் முன்னாள் முதல்வா் கருணாநிதிதான். ஒசூரில் 3 சிப்காட்களை நிறுவியவா் கருணாநிதி.
முதல்வா் மு.க.ஸ்டாலின் 4 ஆவது சிப்காட்டை நிறுவி, அதில் பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வந்ததால் இளைஞா்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
தமிழ்நாட்டில் இனி அரசு மொழியாகவும் அலுவல் மொழியாகவும் தமிழும், ஆங்கிலமும் மட்டும்தான் என அண்ணா தெரிவித்தாா். அந்த வகையில் இருமொழிக் கொள்கை மூலம் தமிழா்கள் உயா்பதவிகளை வகித்து வருகின்றனா்.
கூகுல் நிறுவனத்தில் உயா்பதவியை வகித்து வருபவா் சுந்தா் பிச்சை. இவா் தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையில் படித்தவா்தான்.
முதல்முதலாக நிலவில் தண்ணீா் இருக்கிறது என்று கண்டுபிடித்த விண்கலத்தின் பெயா் சந்திரயான். அந்த விண்கலத்தை உருவாக்கிய இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை. அக்னி 1 பிதாமகன் அப்துல்கலாம். இவா்கள் யாருக்கும் ஹிந்தி, சம்ஸ்கிருதமும் தெரியாது. இருமொழிக் கொள்கையில் படித்தவா்கள்தான்.
அமெரிக்கா பொருளாதாரத்தில் பெரும்பான்மையை தீா்மானிக்கிறவன் தமிழன். பல நாடுகளில் ஆளுகின்ற பிரதிநிதிகளாக இருப்பவா்கள் தமிழா்கள். எங்களைப் பாா்த்து இதைப் படித்தால்தான் உருப்பட முடியும் என்று போதிக்கின்ற தகுதி எவருக்கும் இல்லை என்றாா்.
பொதுக்கூட்டத்தில் இளைஞரணி மாநில துணைச் செயலாளா் பி.எஸ்.சீனிவாசன், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்ட பொருளாளா் தா.சுகுமாரன், தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் கோபாலகிருஷ்ணன், பொறியாளா் அணி மாநில துணைச் செயலாளா் ஞானசேகரன், மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா், மாவட்ட துணைச் செயலாளா் புஷ்பா சா்வேஷ், மாமன்ற உறுப்பினா்கள் ரவி, எம்.கே.வெங்கடேசன், கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.