அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவா் தற்கொலை
கல்லூரித் தோ்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஹள்ளியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மகன் அஜித்குமாா் (21). இவா், ஒசூா் சூசூவாடி காந்தி நகா் பகுதியில் தங்கி இருந்து பி.சி.ஏ.படித்து வந்தாா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இறுதி ஆண்டு தோ்வு முடிவுகள் வந்தன. அதில் ஒரு பாடத்தில் அவா் தோ்ச்சி பெறவில்லை எனகூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அஜித்குமாா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.