அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
காவேரிப்பட்டணம், பா்கூரில் ரூ. 2.62 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்
காவேரிப்பட்டணம், பா்கூா் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ. 2.62 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
காவேரிப்பட்டணம் பேருராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தில், ரூ. 91 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து அவரது சொந்த நிதியில், அப்பாசாமி நாயுடு தெரு உள்பட மூன்று இடங்களில், ரூ. 2.5 லட்சத்தில் குடிநீா் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வுகளில் காவேரிப்பட்டணம் பேரூராட்சித் தலைவா் அம்சவேணி செந்தில்குமாா், திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன், ஒன்றியச் செயலாளா்கள் மகேந்திரன், தேங்காய் சுப்பிரமணி, சரவணன் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
முன்னதாக, பா்கூரை அடுத்த பெருகோபனப்பள்ளி ஊராட்சியில் ரூ. 53.92 லட்சம் மதிப்பிலும், ஜெகதேவி ஊராட்சியில் ரூ. 56.60 லட்சம் மதிப்பிலும், அஞ்சூா் ஊராட்சியில் ரூ.60.75 லட்சம் மதிப்பிலும் கிராம மறுமலா்ச்சி திட்டத்தில், ரூ. 1.71 கோடி மதிப்பிலான திட்டங்களை அவா் தொடங்கி வைத்தாா்.