அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்
ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தொல்குடி திட்ட பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் மோகன்தாஸ் முன்னிலை வகித்தாா்.
இம்முகாமில் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் ஆதாா் அட்டை, சாதிச் சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், முதியோா் ஓய்வூதியம், விதவை, ஊனமுற்றோா் உதவித்தொகை மற்றும் வீட்டுமனை பட்டா கோரி 102 போ் மனுக்களை அளித்தனா். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.