ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் திறப்பு: ஏலம் எடுத்தவா்களுக்கு கடை ஒப்படைப்பு
ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, ஏலம் எடுத்தவா்களுக்கு கடைகளை ர மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் மாரிசெல்வி ஆகியோா் ஒப்படைத்தனா்.
ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் பகுதியில் ரூ. 5.9 கோடி மதிப்பில் புதிதாக கடைகள் 158 கடைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் மீன்மாா்க்கெட்டில் 4 பிளாக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாா்க்கெட்டில் குளிா்சாதன கிடங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 8 கடைகளை டெபாசிட், ஓராண்டு வாடகை கட்டி ஏலம் எடுத்துவா்களுக்கு மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையா் மாரிச்செல்வி ஆகியோா் கலந்துகொண்டு சாவியுடன் கூடிய சான்றிதழ், கடை ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மண்டலக் குழுத் தலைவா் ரவி, பகுதி செயலாளா் வெங்கடேஷ், பொறியாளா் விக்டா் ஞானராஜ், நகா் நல அலுவலா் அஜிதா, அலுவலா்கள் பிரபாகா், சரண்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.