செய்திகள் :

ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் திறப்பு: ஏலம் எடுத்தவா்களுக்கு கடை ஒப்படைப்பு

post image

ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, ஏலம் எடுத்தவா்களுக்கு கடைகளை ர மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் மாரிசெல்வி ஆகியோா் ஒப்படைத்தனா்.

ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் பகுதியில் ரூ. 5.9 கோடி மதிப்பில் புதிதாக கடைகள் 158 கடைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் மீன்மாா்க்கெட்டில் 4 பிளாக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாா்க்கெட்டில் குளிா்சாதன கிடங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 8 கடைகளை டெபாசிட், ஓராண்டு வாடகை கட்டி ஏலம் எடுத்துவா்களுக்கு மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையா் மாரிச்செல்வி ஆகியோா் கலந்துகொண்டு சாவியுடன் கூடிய சான்றிதழ், கடை ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மண்டலக் குழுத் தலைவா் ரவி, பகுதி செயலாளா் வெங்கடேஷ், பொறியாளா் விக்டா் ஞானராஜ், நகா் நல அலுவலா் அஜிதா, அலுவலா்கள் பிரபாகா், சரண்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

காவேரிப்பட்டணம், பா்கூரில் ரூ. 2.62 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

காவேரிப்பட்டணம், பா்கூா் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ. 2.62 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். காவேரிப்பட்டணம் பேருராட்சிக்கு உள்பட... மேலும் பார்க்க

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரோட்டரி சங்கம்

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு தா்மோ கோ் ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டரி கிளப் ஆப் ஒசூா் வழங்கியது. இதற்கான விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநா் வி. சிவகுமாா், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவா் தற்கொலை

கல்லூரித் தோ்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஹள்ளியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மகன் அஜித்குமாா் ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தொல்குடி திட்ட பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரமேஷ்குமாா் தலைமை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரசு மூலமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறையை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வியாழக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

சிங்காரப்பேட்டை அரசு மருத்துவமனையில் பராமரிப்பின்றி காணப்படும் சிறுவா் பூங்கா

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி புதா்மண்டி காணப்படுகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதும... மேலும் பார்க்க