இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
இருளில் கொள்ளிடம் ஆற்றுப் பாலம்: மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை
சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில், மின்விளக்குகள் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி அருகே கொள்ளிடத்தில், மயிலாடுதுறை- கடலூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றில் 1952-இல் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் முறையாக பராமரிக்கப்படாமல், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.
இதனால், சுமாா் ஒரு கி.மீ. நீளமுள்ள இந்த பாலத்தை பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். இரவு நேரத்தில் பாலம் இருட்டாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் பாலத்தின் பக்கவாட்டு தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து விபத்து நேரிடுகிறது.
ஆகையால், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இப்பாலத்தில் மின் விளக்குகள் வசதி ஏற்படுத்தி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.