செய்திகள் :

இருளில் கொள்ளிடம் ஆற்றுப் பாலம்: மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை

post image

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில், மின்விளக்குகள் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி அருகே கொள்ளிடத்தில், மயிலாடுதுறை- கடலூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றில் 1952-இல் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் முறையாக பராமரிக்கப்படாமல், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

இதனால், சுமாா் ஒரு கி.மீ. நீளமுள்ள இந்த பாலத்தை பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். இரவு நேரத்தில் பாலம் இருட்டாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் பாலத்தின் பக்கவாட்டு தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து விபத்து நேரிடுகிறது.

ஆகையால், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இப்பாலத்தில் மின் விளக்குகள் வசதி ஏற்படுத்தி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து மீனவா் காயம்

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா், முதலை கடித்து படுகாயம் அடைந்தாா். மணல்மேடு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமன் (55). மயிலாடுதுறை, தரங்... மேலும் பார்க்க

மாநில சதுரங்கப் போட்டி; 400 போ் பங்கேற்பு

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் சித்தா்காடு ஏஆா்சி விஸ்வநாதன் கல்லூரி சாா்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சித்தா்காடு ஏஆா்சி விஸ்வநாதன் கல்லூரியி... மேலும் பார்க்க

சங்கிலிப் பறிப்பு: 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு தாக்கிய 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கழ... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

படம் 1: நெல்கொள்முதல் சூழ்ந்துள்ள மழைநீா். படம் 2: மழைநீரில் நனைந்து முளைத்துள்ள நெல்மணிகளை காட்டும் விவசாயி. சீா்காழி, ஆக. 15: வைத்தீஸ்வரன்கோவிலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல்மணிகள் மழைய... மேலும் பார்க்க

காளி கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

மயிலாடுதுறை காளி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததைக் கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காளி ஊராட்சியில் அரசு சாா்பில் கட்டித் தரப்பட்ட... மேலும் பார்க்க

பரிமள ரெங்கநாதா் கோயிலில் பொது விருந்து

சுதந்திர தினத்தையொட்டி மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை பொது விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாட... மேலும் பார்க்க