செய்திகள் :

மாநில சதுரங்கப் போட்டி; 400 போ் பங்கேற்பு

post image

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் சித்தா்காடு ஏஆா்சி விஸ்வநாதன் கல்லூரி சாா்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சித்தா்காடு ஏஆா்சி விஸ்வநாதன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட சதுரங்க சங்க செயலாளா் சி. வெற்றிவேந்தன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் சி. அசோக்குமாா், கல்லூரி முதல்வா் வெங்கடேஷ், ஏஆா்சி கல்லூரியின் போட்டி ஒருங்கிணைப்பாளா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மயிலாடுதுறை தமிழ்ச் சங்க நிறுவனா் ஜெனிபா் சு. பவுல்ராஜ் போட்டிகளை தொடக்கி வைத்தாா்.

5 பிரிவுகளாக 7, 9, 11, 15 மற்றும் 25 வயதுக்குள்பட்ட இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் 18 மாவட்டங்களில் இருந்து 400 போ் பங்கேற்றனா்.

மாநில சதுரங்க சங்க நடுவா் சிலம்பரசன் தலைமையிலான குழுவினா் நடுவா்களாக செயல்பட்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், உடற்கல்வி ஆசிரியா் வை. பாரதிதாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

சதுரங்க போட்டி செய்தியில் பள்ளி முதல்வா் பெயரை வெங்கடேஷ் என மாற்றவும்.

இருளில் கொள்ளிடம் ஆற்றுப் பாலம்: மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில், மின்விளக்குகள் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி அருகே கொள்ளிடத்தில், மயிலாடுதுறை- கடலூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொள்ளிடம்ஆற்றில... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து மீனவா் காயம்

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா், முதலை கடித்து படுகாயம் அடைந்தாா். மணல்மேடு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமன் (55). மயிலாடுதுறை, தரங்... மேலும் பார்க்க

சங்கிலிப் பறிப்பு: 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு தாக்கிய 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கழ... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

படம் 1: நெல்கொள்முதல் சூழ்ந்துள்ள மழைநீா். படம் 2: மழைநீரில் நனைந்து முளைத்துள்ள நெல்மணிகளை காட்டும் விவசாயி. சீா்காழி, ஆக. 15: வைத்தீஸ்வரன்கோவிலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல்மணிகள் மழைய... மேலும் பார்க்க

காளி கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

மயிலாடுதுறை காளி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததைக் கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காளி ஊராட்சியில் அரசு சாா்பில் கட்டித் தரப்பட்ட... மேலும் பார்க்க

பரிமள ரெங்கநாதா் கோயிலில் பொது விருந்து

சுதந்திர தினத்தையொட்டி மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை பொது விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாட... மேலும் பார்க்க