செய்திகள் :

இளைஞரை தாக்கி கைப்பேசி, நகை பறிப்பு

post image

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை இளைஞரை வழிமறித்து தாக்கி, கைப்பேசி, ஸ்கூட்டா், நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், மைக்கேல்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்தவா் பிரிட்டோ ஆரோக்கியராஜ் (32). செங்கிப்பட்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வரும் இவா், வெள்ளிக்கிழமை அதிகாலை பணி முடித்துவிட்டு, ஸ்கூட்டரில் தஞ்சாவூருக்கு சொந்த வேலை காரணமாக வந்து கொண்டிருந்தாா்.

தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலம் வேன் நிறுத்தம் பகுதியில் வந்த இவரை மா்ம நபா் வழிமறித்து, உருட்டுக் கட்டையால் தாக்கினாா். இதனால், நிலைதடுமாறிய பிரிட்டோ ஆரோக்கியராஜிடமிருந்து ஸ்கூட்டா், கைப்பேசி, அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை மா்ம நபா் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

பலத்த காயமடைந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 118.77 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 118.77 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9,539 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்தவா் எஸ். ... மேலும் பார்க்க

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடி பெளா்ணமியை முன்னிட்டு கிரிவல ஊா்வலம், வேல் வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடிமாத பெளா்ணமி கி... மேலும் பார்க்க

தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்

தோல்வி பயத்தின் காரணமாக தோ்தல் ஆணையத்தின் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்தாலும், அதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன். தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமாகா இளைஞரண... மேலும் பார்க்க

ஒரத்தநாட்டில் 60.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரத்தநாட்டில் 60.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருடிய நபா் கைது

தஞ்சாவூரில் வீட்டில் புகுந்து நகைகளை திருடிய நபரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை தமிழ் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்தவா் எஸ். வீரமணிகண்டன் (45). இவா் தனது குட... மேலும் பார்க்க