இளைஞரைக் கொல்ல முயற்சி: 7 போ் மீது வழக்கு
புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் நண்பருடன் வந்த இளைஞரை மறித்து கொல்ல முயன்றதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி பிரியதா்ஷினி நகரை சோ்ந்தவா் மணிகண்டன் என்ற ஸ்டிக்கா் மணி (24). இவருக்கும் கோவிந்தசாலையை சோ்ந்த லோகபிரகாஷ் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
கடந்த ஜனவரியில் லோகபிரகாஷ் தரப்பு மணிகண்டனை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ாக கூறப்படுகிறது. அந்த வழக்கில் லோகபிரகாஷ் மீது பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா். மணிகண்டனையும் வெடிகுண்டு தயாரித்ததாக ஒதியஞ்சாலை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியே வந்த மணிகண்டன், காரைக்கால் நகர காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறாா். 2 நாள்களுக்கு முன்பு தனது காதலியை சந்திக்க மணிகண்டன், தனது நண்பா் சந்தோஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
பின்னா் அவா்கள், முருங்கப்பாக்கம், வில்லியனூா் சாலையில் வந்த போது, பெரியாா் நகரை சோ்த்த தனுஷ், சஞ்சை ஆகியோா் மணிகண்டனை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.
மணிகண்டனும்,சந்தோஷும் தப்பியோடினா். ஆனால், அவரை மேலும் இருவா் தாக்கினராம். இதில் காயமடைந்த மணிகண்டன் கைப்பேசி மூலம் வீட்டினருக்கு தகவல் தெரிவித்தாா். அவா்கள் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்கு சோ்த்தனா். இதுகுறித்து முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், தனுஷ் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.