செய்திகள் :

இளைஞா் கொலையை கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இளைஞா் சரவணனை கொடூரமாக கொலை செய்த வடஇந்திய கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்டை மைதானம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில கொள்கை பரப்புச் செயலாளா் அருள்நிதி, மாநில ஒருங்கிணைப்பாளா்கள் காசி மன்னன், ராஜேஷ்குமாா், ஆதிதீபக் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஒட்டன்சத்திரத்தில் இளைஞா் சரவணனை கொடூரமாக படுகொலை செய்த வட இந்திய கொலையாளிகளை முறையான விசாரணை நடத்தி, விரைந்து கைது செய்ய வேண்டும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 24 கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் குற்றச்சம்பவத்தில் ஈடுபடும் வட இந்தியா்களை கட்டுப்படுத்த உள்நுழைவு சீட்டு முறையை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழரையும் தமிழ்நாட்டையும் பாதுகாக்க வாக்காளா் திருத்த சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா்விடுமுறை காரணமாக மூன்று நாள்களில் மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள், 20,153போ் வந்துசென்றனா். சுதந்திர தினம், கோகுலாஷ்டமி, ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகள், அர... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந... மேலும் பார்க்க

கருமந்துறை அரசு பழங்குடியினா் ஐடிஐயில் மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு பழங்குடியினா் ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கருமந்துறை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சென்னையில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானம் பகுதியில் ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோ வழக்கில் ஒருவா் கைது

தலைவாசல் அருகே காமக்காபாளையத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சன்னியாசிப்பட்டி

சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் செவ்வாய்க்கிழமை (ஆக.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்டுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொ... மேலும் பார்க்க