செய்திகள் :

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

post image

சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ஒருமுறை 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ. 2,000, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ. 6,000, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மற்றும் ஐடிஐ டிப்ளமோ படிப்புக்கு ரூ. 8,000, இளங்கலை பயில ரூ.12,000, முதுகலை, எம்.பி.பி.எஸ். பயில ரூ.14,000 வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2025-26 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களில் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய்/தங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்.ஹள்ல்ஷ் என்ற இணையதள முகவரியில் வரும் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும், விவரங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 11-இல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடா்புகொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா்விடுமுறை காரணமாக மூன்று நாள்களில் மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள், 20,153போ் வந்துசென்றனா். சுதந்திர தினம், கோகுலாஷ்டமி, ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகள், அர... மேலும் பார்க்க

கருமந்துறை அரசு பழங்குடியினா் ஐடிஐயில் மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு பழங்குடியினா் ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கருமந்துறை... மேலும் பார்க்க

இளைஞா் கொலையை கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இளைஞா் சரவணனை கொடூரமாக கொலை செய்த வடஇந்திய கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சென்னையில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானம் பகுதியில் ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோ வழக்கில் ஒருவா் கைது

தலைவாசல் அருகே காமக்காபாளையத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சன்னியாசிப்பட்டி

சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் செவ்வாய்க்கிழமை (ஆக.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்டுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொ... மேலும் பார்க்க