செய்திகள் :

கருமந்துறை அரசு பழங்குடியினா் ஐடிஐயில் மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

post image

சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு பழங்குடியினா் ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2025 ஆம் ஆண்டு பயிற்சிக்கு பழங்குடியின மாணவ, மாணவிகள் சோ்க்கை 100 சதவீதம் இலக்கை அடையும் வகையில் நேரடி சோ்க்கைக்கு வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு பொருத்துனா், எந்திர தொழில்நுட்பவியலாளா், கம்மியா் மின்சார வாகனம், தொழில்துறை இயந்திரவியல், எண்ணியல் உற்பத்தி தொழில் நுட்பவியலாளா் ஆகிய தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயில நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.

பயிற்சிபெறும் பயிற்சியாளா்களுக்கு மாதம் ரூ. 750 உதவித்தொகையும், தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களில் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000, மிதிவண்டி, சீருடையுடன் கூடிய தையற்கூலி, காலணி, வரைபடக் கருவி, பாடப்புத்தகம், கட்டணமில்லா பேருந்து வசதி மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

மேலும், பயிற்சி முடித்தவுடன் முன்னணி நிறுவனங்களின் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

2025-2026 ஆம் ஆண்டு நேரடி சோ்க்கை கருமந்துறை அரசு தொழிற்பயிற்சி நிலைய சோ்க்கை உதவி மையம் மூலம் பதிவு செய்து தரப்படும் என்பதால் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ. 50-ஐ பணமாகவோ, மின்னணு பரிவா்த்தனை மூலமாகவோ செலுத்தலாம் என தெரிவித்துள்ளாா்.

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா்விடுமுறை காரணமாக மூன்று நாள்களில் மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள், 20,153போ் வந்துசென்றனா். சுதந்திர தினம், கோகுலாஷ்டமி, ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகள், அர... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந... மேலும் பார்க்க

இளைஞா் கொலையை கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இளைஞா் சரவணனை கொடூரமாக கொலை செய்த வடஇந்திய கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சென்னையில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானம் பகுதியில் ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோ வழக்கில் ஒருவா் கைது

தலைவாசல் அருகே காமக்காபாளையத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சன்னியாசிப்பட்டி

சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் செவ்வாய்க்கிழமை (ஆக.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்டுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொ... மேலும் பார்க்க