செய்திகள் :

இஸ்ரோ-நாசா வடிவமைத்த நிசாா் செயற்கைக்கோள்: ஜூலை 30-இல் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது

post image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி - எஃப் 16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது.

இஸ்ரோவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்கான நிசாா் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன.

அதற்கான ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே கையொப்பமானது. அதன்படி இருநாட்டு விண்வெளி ஆய்வாளா்களின் தொடா் முயற்சியில் ரூ.12,000 கோடி மதிப்பில் நிசாா் செயற்கைக்கோள் வடிமைக்கப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த ஆண்டு நிறைவுபெற்றன.

அதைத்தொடா்ந்து பல்வேறு கட்ட சோதனைகள் முடிவடைந்த நிலையில், நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எஃப் -16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 30-ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனா். இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 743 கிமீ தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. மொத்தம் 2,392 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 3 முதல் 5 ஆண்டுகள்.

இந்த திட்டத்தின் வாயிலாக புவியின் சூழலியல் மாற்றங்கள் குறித்து நுட்பமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இதன்மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடா் மேலாண்மை உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெற முடியும். குறிப்பாக புவியின் நிலப்பரப்பு, நீா்ப்பரப்பு, பனிப் பரப்புகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களைகூட கண்டறியலாம்.

நிசாா் செயற்கைக்கோள் புவிப் பரப்பை முழுமையாக 12 நாள்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயா் தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கும். இதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய இருவேறு வகையான சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு வரை அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் ஒற்றை அலைவரிசையிலான சிந்தடிக் கருவிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். ஆனால், நிசாா் செயற்கைக்கோளில் மட்டுமே முதன்முறையாக 2 அலைவரிசை கருவிகள் இடம்பெற்றுள்ளன.

நிசாா் திட்டத்தில் எல் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா், ஜிபிஎஸ் ரிசீவா், அதிக திறன் கொண்ட சாலிட்ஸ்டேட் பதிவு மற்றும் சேமிப்பு கட்டமைப்பு, தரவு துணை கட்டமைப்பு (டேட்டா சப் சிஸ்டம்) ஆகியவற்றை நாசா வடிவமைத்துள்ளது.

எஸ் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா், செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடா்பு வசதிகளை இஸ்ரோ வடிமைத்துள்ளது.

அதுமட்டுமல்லாது செயற்கைக்கோளை ஏவுவதற்கான ராக்கெட் மற்றும் இதர திட்ட பணிகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

மே.வங்கத்தில் மின்னல் பாய்ந்து 13 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் பங்குரா மற்றும் புர்பா பர்தாமன் ஆகிய மாவட்டங்களில், இன்று (ஜூலை 24) மின்னல் பாய்ந்து 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று (ஜூலை 2... மேலும் பார்க்க

அரசமைப்பில் மதச்சார்பின்மை நீக்கப்படாது... ஆனால்! - மத்திய அரசு பதில்

புது தில்லி: அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்களை நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று(ஜூலை 24) மாநிலங்களவை கூட்டத்தொட... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து நடந்த 4 நாள்களில் 112 விமானிகள் மருத்துவ விடுப்பு!

அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து தீப்பற்றிய விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன விமானிகள் பலர் விடுப்பில் சென்றிருப்பது அதிகரித்துள்ளது.விமான விபத்துக்குப்பின் 1... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15 மாவோயிஸ்ட... மேலும் பார்க்க

இனி இந்த பொருள்களின் விலை குறையும்! பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்!

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையெழுத்தானது. பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை சென்றுள்ளார... மேலும் பார்க்க

திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் யாருக்குக் கிடைக்கும்?

திருப்பதி திருமலையில், ஸ்ரீவாணி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய டிக்கெட் வழங்கும் மையம் கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெற... மேலும் பார்க்க