ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!
ஈரோட்டில் வங்கதேச தம்பதி கைது
ஈரோட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த தம்பதி புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வங்கதேசத்தைச் சோ்ந்த தம்பதி பப்லு சா்தாா் (37), ரெபெயா காதூம் (37). இருவரும் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வெவ்வேறு ஆண்டுகளில் ஈரோட்டுக்கு வந்து தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஈரோடு போஸ்டல் நகரில் தங்கியிருந்த இருவரையும் கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா்கள் போலியாக ஆதாா் அட்டை பெற்று ஈரோட்டில் வாடகை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாகத் தங்கி இருந்து பெருந்துறை சிப்காட் தொழில் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தம்பதியை ஈரோடு வடக்கு காவல் துறையினா் கைது செய்தனா்.