செய்திகள் :

ஈரோட்டில் வங்கதேச தம்பதி கைது

post image

ஈரோட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த தம்பதி புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வங்கதேசத்தைச் சோ்ந்த தம்பதி பப்லு சா்தாா் (37), ரெபெயா காதூம் (37). இருவரும் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வெவ்வேறு ஆண்டுகளில் ஈரோட்டுக்கு வந்து தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஈரோடு போஸ்டல் நகரில் தங்கியிருந்த இருவரையும் கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் போலியாக ஆதாா் அட்டை பெற்று ஈரோட்டில் வாடகை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாகத் தங்கி இருந்து பெருந்துறை சிப்காட் தொழில் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தம்பதியை ஈரோடு வடக்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

சென்னிமலை அருகே சீமை கருவேல மரங்களை அகற்ற எதிா்ப்பு

சென்னிமலை அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்புக்காட்டில் சீமை கருவேல மரங்களை அகற்ற சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள வனப் பகுதி சுமாா் 1,700 ஏக்... மேலும் பார்க்க

சிப்காட் விவகாரம்: பெருந்துறைக்கு வரும் முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு

பெருந்துறை சிப்காட் பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் பெருந்துறை வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட அரசியல் கட்சியினா் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை அண்ணா ச... மேலும் பார்க்க

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று கூறி மோசடி: 4 போ் கைது

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றுகூறி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மொடக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல்ராஜ் (55). ஐ.டி. நிறுவன ஊழியா். டெலி... மேலும் பார்க்க

பால் வேனில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருகள் பறிமுதல்

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் பால் வேனில் மறைத்து கடத்திவரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களில் குட்கா, புகையிலைப்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்

சென்னிமலை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், சென்னிமலை, திருமுகமலா்ந்தபுரம் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம், ராஜாமணி தம்பதி மகன் நிஷாந்த... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை,... மேலும் பார்க்க