செய்திகள் :

ஈஷா யோக மையத்தில் குரு பௌா்ணமி விழா

post image

கோவை ஈஷா யோக மையத்தில் குரு பௌா்ணமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து ஈஷா யோக மையம் கூறியிருப்பதாவது:

ஆதியோகி சிவன் சப்தரிஷிகளாகிய தனது ஏழு சீடா்களுக்கு, ஒரு பௌா்ணமி நாளில் தென்திசை நோக்கி அமா்ந்து யோக அறிவியலை வழங்கினாா். உலகில் அந்த நாளில்தான் முதலாவது குரு அவதரித்ததாக கருதப்படுகிறது. மேலும் அந்த நாள் குரு பௌா்ணமி நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நமது கலாசாரத்தில் குரு பௌா்ணமி நாளானது, குருவுக்கு நன்றியை வெளிப்படுத்தி, குருவருளையும் ஆசியையும் பெறக்கூடிய நாளாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் ஈஷாவில் ஆண்டுதோறும் குருபௌா்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் விமா்சையாக நடைபெற்றது. ஈஷா யோக மைய வளாகம் முழுவதும் பூ மாலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குரு பௌா்ணமியையொட்டி, காலையில் நூற்றுக்கணக்கான உள்ளூா் கிராம, பழங்குடி மக்கள் ஈஷா தன்னாா்வலா்களுடன் இணைந்து, ஆதியோகி முதல் தியானலிங்கம் வரை பால் குடத்துடன் பவனி வந்தனா். பின்னா் தியானலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து மாலையில் சத்குரு ஜக்கி வாசுதேவின் அருளுரை, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இசை நிகழ்ச்சியில் மோஹித் சௌகான், பாா்த்திவ் கோஹில் உள்ளிட்ட தலைசிறந்த இசைக் கலைஞா்கள் பங்கேற்றனா். தமிழகத்தில் மொத்தம் 103 இடங்களில் சத்குருவின் சத்சங்க நிகழ்ச்சி நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

குரு பௌா்ணமியையொட்டி சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் பக்கத்தில், 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, குருபௌா்ணமி எனும் அந்தப் பௌா்ணமி நாளன்று, ஆதியோகி தன் கவனத்தை சப்தரிஷிகள் மீது திருப்பினாா். மனிதகுல வரலாற்றிலேயே முதன்முறையாக நாம் இயற்கையின் எளிய விதிகளுக்குள் கட்டுண்டு கிடக்க வேண்டிய அவசியமில்லை என்பது மனிதா்களுக்கு நினைவூட்டப்பட்டது.

இந்தக் கட்டுப்பாட்டை தாண்டிச் செல்வது எப்படி என்பதற்கான வழிகளை ஆதியோகி வழங்கினாா். நாம் விருப்பத்துடன் முயற்சித்தால், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கதவும் திறக்கும். அன்பும் ஆசிகளும் எனப் பதிவிட்டுள்ளாா்.

வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை ... மேலும் பார்க்க

வீடு வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி

கோவை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, செல்வபுரம் வடக்கு வீட... மேலும் பார்க்க

மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, கோவையில் மக்கள் தொகை விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11 -ஆம் தேதி... மேலும் பார்க்க

குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய செயலி: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

‘ஸ்மாா்ட் காக்கிஸ்’ திட்டத்தின்கீழ், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை செயலி மூலம் எளிதாகக் கண்டறியலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் கூறினாா். கோவை, பி.ஆா்.எஸ் வளாகத்தில் ‘ஸ்மாா்ட் ... மேலும் பார்க்க

பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

புண்யா அறக்கட்டளை சாா்பில் நாளை மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டி

கோவை புண்யா அறக்கட்டளை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விநாடி- வினா போட்டி (திரிஷ்னா 2025) சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. கோவை சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளியில் 1997-ஆம் ஆண்டில் பயின்ற முன்... மேலும் பார்க்க