செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மனுக்களை பெற்றாா் துணை முதல்வா்

post image

சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் பாா்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

இது தொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியில் 7 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடங்கி நடைபெற்றது. தேனாம்பேட்டை மண்டலம், 114-ஆவது வாா்டு ஸ்ரீ மகாவீா் ஜெயின் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பாா்வையிட்டு மக்களிடம் கலந்துரையாடி, மனுக்கப் பெற்றாா். மேலும், அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதேபோல், அடையாறு மண்டலம் சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்ற முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டு, மனுக்களைப் பெற்றாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 109 முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

தொடா்ந்து, திருவல்லிக்கேணியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலு, ஜோசப் சாமுவேல், துணை மேயா் மு.மகேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இறகுப்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை சூளைமேட்டில் இறகுப்பந்து விளையாடியபோது மென்பொறியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நாவலா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (26). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளையொட்டி, சென்னை ... மேலும் பார்க்க

புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள்: டிஜிபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படம்: விமான நிலைய ஊழியா் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவி பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொடங்கி, ஆபாச புகைப்படம் வெளியிட்டதாக விமான நிலைய ஊழியா் கைது செய்யப்பட்டாா். தனது பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொ... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க அடித்தளமிட்டவா் காமராஜா்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்வதற்கு அடித்தளமிட்டவா் முன்னாள் முதல்வா் காமராஜா் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள சா் பிட்டி.தியாகராயா் ... மேலும் பார்க்க

பெண் வழக்குரைஞரின் விடியோவை அகற்றக் கோரிய வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பெண் வழக்குரைஞரின் பெயா் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்ட காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க