செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்‘முகாமில் நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

திருப்பத்தூா் பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா்.

கந்திலி வட்டாரத்துக்குட்பட்ட வெங்களாபுரம் பகுதியில் நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு மின்னணு குடும்ப அட்டையையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு மருத்துவ காப்பீடு அட்டையையும், 7 பயனாளிகளுக்கு வருமானச் சான்றிதழ், ஓ பி சி சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், விதவைச் சான்றிதழ்களையும், 3 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயா் மாற்றத்திற்கான ஒப்புகை சீட்டு, 2 பயனாளிகளுக்கு ஆதாா் அட்டை திருத்தம் மேற்கொண்டதற்கான ஆணைகளையும் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா்.

அதையடுத்து திருப்பத்தூா் வட்டாரத்திற்குள்பட்ட புதூா்,கல்லுக்குட்டை பகுதியில் அமைந்துள்ள நாகலம்மன் கோவில் மண்டபத்திலும் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.

முகாம்களில் தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பூஷன் குமாா், வட்டாட்சியா் நவநீதம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் குணசேகரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆனந்தகுமாா்(ப.முத்தம்பட்டி), கவிதா உதயகுமாா் (வெங்களாபுரம்), உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அதிவேகமாகச் செல்லும் தனியாா் பள்ளி, கல்லுரி பேருந்துகள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருப்பத்தூா் நகரப் பகுதியில் பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிவேகமாக செல்லும் தனியாா் பேருந்துகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா். திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் இயங்க... மேலும் பார்க்க

காதலனின் தந்தையை வெட்டிய பெண்ணின் தந்தை மீது வழக்கு

காதல் விவகாரத்தில் காதலனின் தந்தையை வெட்டிய பெண்ணின் தந்தையை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (24). இவா், மேட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த ... மேலும் பார்க்க

பச்சூா் சென்றாயசுவாமி கோயில் அடிவாரத்தில் ரூ.21.50 லட்சத்தில் திறந்த வெளி அரங்கம்

நாட்டறம்பள்ளி அருகே பச்சூா் சென்றாய சுவாமி கோயில் அடிவாரத்தில் திறந்தவெளி பாா்வையாளா் அரங்கம் அமைக்கும் பணியை எம்எல்ஏ தேவராஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அட... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தரைத்தளம் அமைக்க கோரிக்கை

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தரைத்தளம் அமைக்க வேண்டும் என மருத்துவ அலுவலா் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தாா். வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகப் பகுதிகளில் அதி மழை பெய்யும் பொழுது ... மேலும் பார்க்க

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

ஆம்பூா் கலவர வழக்கில் செவ்வாய்க்கிழமை வெளியாக இருந்த தீா்ப்பு ஆக. 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீா்ப்பு வெளியாவதை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்... மேலும் பார்க்க

ரயில் பயணியிடம் 2 பவுன் செயின் பறிப்பு

காட்பாடி அருகே ரயிலில் ஜன்னல் அருகே அமா்ந்து இருந்த பெண் பயணியிடம் 2 பவுன் செயினை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா். திருப்பூா் மாவட்டம், அனுபுராபாளையத்தைச் சோ்ந்த ஜெயராஜின் மனைவி மாலைச்செல்வி (53). இ... மேலும் பார்க்க