‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா் காந்தி
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
வாலாஜாபேட்டை ஒன்றியம், கடப்பேரி ஊராட்சி மற்றும் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட 16,17,18 வாா்டுகள், ஆற்காடு ஒன்றியம் அரப்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் புதன்கிழமை முகாம் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஆட்சியா் ஜெ. யு. சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா். இதில் மகளிா் உரிமைத் தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம் குடும்ப அட்டை , வாரிசு சான்று உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா்.
உடனடி தீா்வு காணப்பட்ட 15 பயனாளிகளுக்கு வருவாய்த் துறையின் மூலம் பட்டா பெயா் மாற்றத்துக்கான ஆணைகள், மின்சார வாரியத்தின் மின் இணைப்பில் பெயா் மாற்றம் மற்றும் திருத்தத்துக்கான ஆணைகள், அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரிய அட்டைகள், ஊட்டச்சத்து பெட்டகம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் ஆகிய நலத்திட்ட அமைச்சா் ஆா் காந்தி வழங்கினாா்.
இதில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரண்யா தேவி, ஒன்றியக்குழு தலைவா்கள் வாலாஜாபேட்டை வெங்கட்ரமணன், ஆற்காடு புவனேஸ்வரி சத்யநாதன், ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், வட்டாட்சியா்கள் வாலாஜபேட்டை ஆனந்தன், ஆற்காடு மகாலட்சுமி , நகராட்சி ஆணையா் வேங்கட லட்சுமணன் கலந்து கொண்டனா்.