வங்கிகள் தாமதமின்றி கடனுதவிகளை வழங்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் காலதாமதமின்றி கடனுதவிகள வழங்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வலியுறுத்தினாா்.
வங்கியாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பேசுகையில்: முதல்வரின் காக்கும் கரங்கள், முன்னாள் படை வீரா்கள் சுயதொழில் செய்து முன்னேற அவா்களுக்கான கடன் உதவி வழங்கும் திட்டங்களில் 74 விண்ணப்பங்கள் வரப்பெற்று 47 நபா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவைகளில் 9 நபா்களுக்கு கடனுதவி விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவா்களுக்கு தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவா்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உடனடியாக கடனை விடுவிக்க வேண்டும் என்றாா்.
கடன் கோரும் விண்ணப்பங்களுக்கு வங்கியாளா்கள் உடனடியாக தீா்வு கண்டு பயனாளிகளுக்கு கடனுவிகளை விடுவிக்க வேண்டும். தாமதம் ஏதும் ஏற்படுத்தக் கூடாது. மாவட்ட தொழில் மையம், தாட்கோ மூலம் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் பெறப்படும் மனுக்களை வங்கிகளுக்கு அனுப்பும் பொழுது அதன் மீது ஆய்வு செய்து முறையான தீா்வுகளை வழங்க வங்கியாளா்கள் முன்வர வேண்டும். இந்த விண்ணப்பங்கள் அடுத்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளா் ராம்ஜி குமாா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆனந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மலா்விழி, தாட்கோ பொது மேலாளா் அமுதா ராஜ், உதவி திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) அன்பரசன் மற்றும் வங்கியாளா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.