உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: திருத்தணி வட்டம் தோ்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமுக்கு திருத்தணி வட்டம் தோ்வு செய்யப்பட்டு வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், மாதந்தோறும் (3-ஆவது புதன் கிழமையன்று) ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிய வேண்டும். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில், மே மாதத்துக்கான கள ஆய்வுக்கு திருத்தணி வட்டம் தோ்வு செய்யப்பட்டு வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என்றாா்.