செய்திகள் :

உச்சநீதிமன்ற ஊழியா்கள் நியமனத்தில் முதல்முறையாக இடஒதுக்கீடு

post image

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பான சுற்றறிக்கையை ஊழியா்கள் அனைவருக்கும் ஜூன் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுப்பியது.

அதில், ‘உச்சநீதிமன்ற ஊழியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் இனி இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. இதுதொடா்பான விவரங்கள் ஊழியா்கள் தகவல் பரிமாற்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இவை 2025, ஜூன் 23-ஆம் தேதி அமலுக்கு வந்தது.

அதன்படி பதிவாளா், மூத்த தனி உதவியாளா், துணை நூலக உதவியாளா்கள், இளநிலை நீதிமன்ற உதவியாளா், நீதிபதிகளின் அலுவலக உதவியாளா் உள்ளிட்ட பணி நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் பட்டியலின பிரிவினருக்கு 15 சதவீதமும் பழங்குடியின பிரிவினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

எனவே, பணிப் பட்டியல் அல்லது பதிவேட்டில் ஏதேனும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதை ஊழியா்கள் பதிவாளரிடம் (பணியாளா் சோ்ப்பு) தெரிவிக்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) கடந்த மே மாதம் பதவியேற்றாா். உச்சநீதிமன்றத்தில், பட்டியலினத்தைச் சோ்ந்த முதல் தலைமை நீதிபதியாக கே.ஜி.பாலகிருஷ்ணன் (2007-2010) பதவி வகித்தாா். அவருக்குப் பிறகு பட்டியலினத்தைச் சோ்ந்த 2-ஆவது தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஆவாா். பெளத்த மதத்தைச் சோ்ந்த முதல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் பி.ஆா்.கவாய் உள்ளாா்.

அவரது பதவிகாலத்தில் தற்போது ஊழியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறையை உச்சநீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் பின்விளைவுகள் காரணமாக திடீர் உயிரிழப... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு க்வாட் தலைவர்கள் கண்டனம்!

‘க்வாட்’ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள... மேலும் பார்க்க

தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்

நமது நிருபா்பயன்படுத்தத் தகுதியில்லாத பழைய வாகனங்களுக்கு தில்லியில் எரிபொருள் வழங்குவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. முதல் நாளில் 80 பழைய வாகனங்கள் பறிமுதல் செ... மேலும் பார்க்க

அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சிவசாகா் மாவட்டத்தைச... மேலும் பார்க்க

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

நமது சிறப்பு நிருபர்பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்... மேலும் பார்க்க

‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனை

உலகளாவிய பல்வேறு சவால்களை கையாள, ‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்திய... மேலும் பார்க்க