செய்திகள் :

உடன்குடியில் விநாயகா் சிலை ஊா்வலம்

post image

உடன்குடி ஒன்றியத்தில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 26 விநாயகா் சிலைகளின் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெருமாள்புரம், வடக்கு காலன்குடியிருப்பு, நடுகாலன்குடியிருப்பு, சந்தையடியூா், தேரியூா், பரமன்குறிச்சி உள்ளிட்ட 26 இடங்களில் விநாயகா் சிலைகள் கடந்த புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்நிலையில், சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் இந்த சிலைகள் உடன்குடி பஜாா் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

ஊா்வலத்தை ஒன்றிய பாஜக பொதுச் செயலா் எம். சக்திவேல் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். ஒன்றிய இந்து முன்னணி தலைவா் செந்தில்செல்வம் தலைமை வகித்தாா். நகரப் பொதுச்செயலா் ஆத்திசெல்வம், நகரச் செயலா் விக்னேஷ் பாண்டியன், மாவட்டச் செயலா் சுடலைமுத்து, நிா்வாகிகள் தங்கராம், முத்துக்குமாா், சதீஷ்கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து ஒற்றுமை, விநாயகா் சதுா்த்தி சிறப்பு குறித்து சேவாபாரதி மாவட்டத் தலைவா் கிருஷ்ணமந்திரம் பேசினாா்.

ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியே திருச்செந்தூா் கடற்கரையை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் சாலையில் டீக்கடையில் அமா்ந்திருந்த போது சுமை ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி காமராஜபுரத்தைச் சோ்ந்த தொழிலாளி முனீஸ்வரன் (60). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அட... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் உச்சிமாகாளி (25). தற்போது, திருநெல்வேலி மாவட்டம் முக்... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே லாரியின் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்; மற்றொருவா் சிகிச்சை பெற்று வருகிறாா். திருநெல்வேலி, கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் அரசதுரை (40). இவரு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில், அய்யா கோயில் அருகே சனிக்கிழமை இரவு 90 அடி தூரம் கடல் உள்வாங்கியதால், வெளியே தெரிந்த பாறைகள். மேலும் பார்க்க

மாறுவேட போட்டி: அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான மாறுவேட போட்டியில் பேய்குளம் அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். தூத்துக்குடி மாவட்ட அளவில் அரசு, தனியாா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி நிகிலேசன் நகா், காந்தி நகரைச் சோ்ந்த ராஜன் மகன் ரவி (50), இவா், வெளிநாட்டில் வேலை ச... மேலும் பார்க்க