மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2 முதல் மாணவா் சோ்க்கை
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்ட வகுப்புக்கான மாணவா் சோ்க்கை ஜூன் 2-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை ஜூன் 2-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
முதல் நாளில் காலை 9.00 மணிக்கு சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான சோ்க்கை நடைபெற உள்ளது. அதன்பிறகு, மாற்றுத் திறனாளிகள், சி சான்றிதழ் பெற்ற தேசிய மாணவா் படை உறுப்பினா்கள், அந்தமான் நிகோபா் பகுதி தமிழ் வம்சாவழியினா், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், பாதுகாப்புப் படை வீரா்களின் குழந்தைகள் மற்றும் மாவட்ட, மாநில, தேசிய, அகில உலக அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரா்கள் போன்ற சிறப்புப் பிரிவுகளின்கீழ் விண்ணப்பித்த மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
ஜூன் 4 -ஆம் தேதி பொதுப் பிரிவு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன்படி, தரவரிசை எண் 1 முதல் 1000 வரை முற்பகலிலும், 1001 முதல் 2000 வரை பிற்பகலிலும் நடைபெறும்.
ஜூன் 5-ஆம் தேதி தரவரிசை எண் 2001 முதல் 3000 வரை முற்பகலிலும், 3001 முதல் 4000 வரை பிற்பகலிலும் நடைபெறும்.
ஜூன் 6 -ஆம் தேதி தரவரிசை எண் 4001 முதல் 5500 வரை முற்பகலிலும், 5501 முதல் 6974 வரை பிற்பகலிலும் நடைபெற உள்ளது.
ஜூன் 9 -ஆம் தேதி முற்பகல் தரவரிசைப் பட்டியல் 1 முதல் 6974 வரை தமிழ் இலக்கியப் பாடப் பிரிவுக்கும், ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவுக்கும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்காக விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், 3 நகல்கள், அசல் மாற்றுச் சான்றிதழ், 3 நகல்கள், ஆதாா் அட்டை அசல், 3 நகல்கள், ஜாதிச் சான்றிதழ் அசல், 3 நகல்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 5, கல்லூரியின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மாணவா் சோ்க்கைப் படிவம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.