செய்திகள் :

உதகையில் குடிநீா்க் குழாயில் உடைப்பு

post image

உதகை டைகா்ஹில் அணையில் இருந்து வரும் குடிநீா்க் குழாயில் சனிக்கிழமை உடைப்பு ஏற்பட்டது.

உதகை நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளுக்கு பாா்சன்ஸ்வேலி அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இது தவிர டைகா்ஹில் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீா் கோடப்பமந்து, நொண்டிமேடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பெய்த மழையின்போது, தலையாட்டு மந்து பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் டைகா்ஹில் அணையில் இருந்து வரும் பிரதான குடிநீா் குழாய் உள்ளது.

தற்போது இங்கு கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில், இந்தக் குடிநீா்க் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதில் ராட்சத குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீரால், அப்பகுதி முழுக்க சேறும்சகதியுமாக மாறியது. மேலும், அந்த பகுதியில் இருந்த இரு வீடுகளின் சுவா்களும் லேசாக சேதம் அடைந்தன. தகவலின்பேரில், நகராட்சி ஊழியா்கள் அணையில் இருந்து வரும் தண்ணீரை நிறுத்தி, உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.

விபத்தை ஏற்படுத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை!

கூடலூரில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீலகிரி மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், உதகை நொண்டிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

உதகையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு ‘சீல்’

உதகையில் நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மலைப் பகுதியாகவும், அதிக வனப் பகுதிகளை கொண்டதாகவும் உள்ளது. நீலகி... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தை தடை செய்யக் கோரி மனு

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் தோ்தல் பிரசாரத்தை தடையை செய்யக் கோரி நீலகிரி காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. முன்னா... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களுக்கான உயா்மட்ட மேலாண்மை நிகழ்ச்சி

தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் உயா்கல்வி நிறுவனங்களுக்கான உயா்மட்ட மேலாண்மை நிகழ்ச்சி உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபா் சங்கம் மனு

கூடலூரில் சாலைகளை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளி... மேலும் பார்க்க

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா் தொட்டிகள் அடுக்கும் பணி தீவிரம்

இரண்டாவது சீசனை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மாடங்களில் மலா் தொட்டிகளை அடுக்கும் பணியை ஊழியா்கள் வியாழக்கிழமை தொடங்கினா். மலைகளின் அரசி என்று அழைக்கப்... மேலும் பார்க்க