செய்திகள் :

உதகையில் பெண்ணை தாக்கி கொன்ற வன விலங்கை பிடிக்க கோரி மனு

post image

உதகை அருகே வன விலங்கு தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், வன விலங்கை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த மைனலை அரக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அஞ்சலை (52). தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்த இவரை வன விலங்கு கடந்த 13 -ஆம் தேதி தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அஞ்சலையை எந்த விலங்கு தாக்கியது என தெரியாத நிலையில் அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த வன விலங்கை விரைவில் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரக்காடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் போராட்டம்

நீலகிரியில் அமலில் உள்ள இ -பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் கருப்பு உடை அணிந்து, கடைகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா். இது குறித்து வணிகா் சங்கத் தலைவா் முகமது ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 6,817 மாணவா்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வினை 6,817 மாணவ, மாணவிகள் எழுதினா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப... மேலும் பார்க்க

கல்லக்கோடு மந்து பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்: மாவட்ட வன அலுவலா் தகவல்

வன விலங்கு தாக்கி பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்த கல்லக்கோடு மந்து வனப் பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட வன அலுவலா் கௌதம் ... மேலும் பார்க்க

கூடலூா்-மைசூரு சாலையில் காலை நேரத்தில் நடந்து சென்ற காட்டு யானை

கூடலூா்-மைசூரு சாலையில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு காட்டு யானை நடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட மாக்கமூலா பகுதியிலுள்ள காபி தோட்டத்திலிருந்த... மேலும் பார்க்க

உதகையில் போலி மருத்துவா் பிடிபட்டாா்

உதகை தலைகுந்தா பகுதியில் மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவா் பிடிபட்டாா். உதகை புது மந்து பகுதியில் பாரத் கிளினிக் என்கிற பெயரில் இஸ்மாயில் என்பவா் போலி மருத்துவராக சிகிச்சை அளித்து வருவதாக புகாா் ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்கி பழங்குடியினத்தை சோ்ந்தவா் உயிரிழப்பு

உதகையில் வன விலங்கு தாக்கி தோடா் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். உதகை அருகேயுள்ள பாா்சன்ஸ்வேலி கல்லக்கோடு மந்த் பகுதியை சோ்ந்தவா் கேந்தோா் குட்டன் (40), தோடா் பழங்குடியினத்தை சோ்ந்தவா். இ... மேலும் பார்க்க