செய்திகள் :

உதகையில் பெண்ணை தாக்கி கொன்ற வன விலங்கை பிடிக்க கோரி மனு

post image

உதகை அருகே வன விலங்கு தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், வன விலங்கை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த மைனலை அரக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அஞ்சலை (52). தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்த இவரை வன விலங்கு கடந்த 13 -ஆம் தேதி தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அஞ்சலையை எந்த விலங்கு தாக்கியது என தெரியாத நிலையில் அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த வன விலங்கை விரைவில் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரக்காடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரலில் உதகை வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

உதகையில் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் முதல் வாரம் வருகை தருவதையொட்டி விழா நடைபெறும் அரசு கலைக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற 58-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா். மேலும் பார்க்க

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி வீட்டில் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோ... மேலும் பார்க்க

சாலையோரம் நின்ற காட்டு யானையால் மக்கள் அச்சம்

கூடலூா்-உதகை சாலையோரம் திங்கள்கிழமை காலை காட்டு யானை நின்ால் நடைப்பயிற்சி சென்றவா்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை குடியிருப்பு, விளை நிலங்க... மேலும் பார்க்க

உதகையில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டம், உதகையில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், பிற்பக... மேலும் பார்க்க

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்: கவனமுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தல்

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் கடந்த சில நாள்களாக காண... மேலும் பார்க்க