உப்பாறு அணைக்கு பிஏபி தொகுப்பில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
உப்பாறு அணைக்கு பிஏபி தொகுப்பில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.காளிமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் பிஏபி தொகுப்பில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளன. பிஏபி பாசனப் பகுதிகளிலும் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால், உப்பாறு அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது போதிய அளவு மழை இல்லை. அதேவேளையில், உப்பாறு அணைக்கு கடந்த ஆண்டு 10 நாள்கள் தண்ணீா் திறந்துவிட வேண்டிய நிலையில் 5 நாள்கள் மட்டுமே தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
ஆகவே, பிஏபி தொகுப்பில் இருந்து உப்பாறு அணைக்கு நடப்பு ஆண்டு 10 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு மனுவில், தாராபுரம் வட்டத்தில் விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கக் கோரி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக பணம் கட்டி காத்திருக்கின்றனா்.
மின் தளவாடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரையில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஆகவே, மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன் அளித்த மனு விவரம்: உடுமலைபேட்டை மேற்குத் தொடா்ச்சி மலையில் ஆனைமலைக்குன்றுகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் கிடைக்கும் நீா்வளத்தை வைத்துத்தான் பிஏபி பாசனத் திட்டத்தில் திருமூா்த்தி அணையில் இருந்து மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், எங்களது பகுதியில் பசுமைப்பரப்பு குறைந்து வருவதால், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பொழிவு குறைந்து பாசன நீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
எங்கள் பகுதியில் நாளுக்கு நாள் மனித-விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. திருமூா்த்தி அணை நீா்தேங்கும் பகுதியில் யானைகள் வந்து நீா் அருந்தும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும்.
பல்லுயிா் பெருக்கத்தை தடுக்கும் வகையில் வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஆக்கிரமிப்பாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், ஆனைமலைக்குன்றுகளில் பலவகையான விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பயனளிக்கும் வகையில் மரங்களையும், தாவரங்களையும் வளா்த்து பல்லுயிா் பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
152 மனுக்கள்: குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 152 மனுக்கள் பெறப்பட்டன.
இதைத் தொடா்ந்து, முந்தைய கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், அமராவதி சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் ஜோதிவேல், இணை இயக்குநா் (வேளாண்மை) சுந்தரவடிவேலு, மாநகர காவல் துணை ஆணையா் தீபா சத்தியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.